ETV Bharat / jagte-raho

குடிபோதையில் தகராறு: ஒருவர் கொலை!

author img

By

Published : Oct 28, 2019, 5:14 PM IST

Updated : Oct 28, 2019, 5:29 PM IST

சென்னை: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

In Chennai one killed, accused arrest

சென்னை ரோட்டரி நகர்ப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22) ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்துவருகிறார்.

கார்த்திக் நேற்று நள்ளிரவு அவரது நண்பர் ராஜேஷ் உள்ளிட்டோருடன் சேர்ந்து நொச்சி நகர்ப் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த பூபாலன் (23) என்பவருக்கும் கார்த்திக்கின் நண்பன் ராஜேஷுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து வாய்த்தகராறு கைகலப்பாக மாறவே பூபாலன் அவனது நண்பர்களுடன் சேர்ந்து, ராஜேஷ் மொபைலை பறித்துக் கொண்டு அவரை துரத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று கார்த்தி வீட்டிற்கு மொபைலை வாங்கிச் செல்ல ராஜேஷ், கார்த்திக் நொச்சி நகருக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பூபாலன்-அவனது நண்பர்கள் கார்த்திக், ராஜேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பூபாலன் அவனது நண்பர் சூர்யா, இருவருடன் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த கார்த்திக்
உயிரிழந்த கார்த்திக்

இதில் மயக்கமடைந்த கார்த்திக்கை, அவரது நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். அங்கு கார்த்திக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மயிலாப்பூர் காவல் துறையினர் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கார்த்திக்கை கத்தியால் குத்திக்கொலை செய்த பூபாலன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சென்னை ரோட்டரி நகர்ப் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22) ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்துவருகிறார்.

கார்த்திக் நேற்று நள்ளிரவு அவரது நண்பர் ராஜேஷ் உள்ளிட்டோருடன் சேர்ந்து நொச்சி நகர்ப் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு ஏற்கனவே நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த பூபாலன் (23) என்பவருக்கும் கார்த்திக்கின் நண்பன் ராஜேஷுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து வாய்த்தகராறு கைகலப்பாக மாறவே பூபாலன் அவனது நண்பர்களுடன் சேர்ந்து, ராஜேஷ் மொபைலை பறித்துக் கொண்டு அவரை துரத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று கார்த்தி வீட்டிற்கு மொபைலை வாங்கிச் செல்ல ராஜேஷ், கார்த்திக் நொச்சி நகருக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பூபாலன்-அவனது நண்பர்கள் கார்த்திக், ராஜேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் பூபாலன் அவனது நண்பர் சூர்யா, இருவருடன் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த கார்த்திக்
உயிரிழந்த கார்த்திக்

இதில் மயக்கமடைந்த கார்த்திக்கை, அவரது நண்பர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். அங்கு கார்த்திக்கைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மயிலாப்பூர் காவல் துறையினர் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கார்த்திக்கை கத்தியால் குத்திக்கொலை செய்த பூபாலன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Intro:சென்னை குடிபோதையில் ஏற்பட்ட தகறாரில் ஒருவர் கத்தியால் குத்தி கொலைBody:சென்னை குடிபோதையில் ஏற்பட்ட தகறாரில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை

சென்னை நொச்சி நகர் பகுதியில் இரண்டு கும்பலுக்குள் ஏற்பட்ட தகறாரில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ரோட்டரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (22). ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இன்னிலையில் கார்த்திக் நேற்றிரவு அவனது நண்பர் ராஜேஷ் உள்ளிட்டோருடன் சேர்ந்து நொச்சி நகர் பகுதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அங்கு ஏற்கனவே நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிந்த பூபாலன்(23) என்பவருக்கும் கார்த்திகின் நண்பர் ராஜேஷுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறவே பூபாலன் மற்றும் அவனது நண்பர்கள் சேர்ந்து ராஜேஷிடம் இருந்து அவனது அலைபேசியை பறித்துக் கொண்டு அவரை அடித்து துரத்தியுள்ளனர். பிரச்சனை முற்றுவதையறிந்த கார்த்திக் ராஜேஷை அழைத்துக் கொண்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று கார்த்திகின் வீட்டிற்கு வந்த ராஜேஷ் அலைபேசியை அவர்களிடம் இருந்து திரும்பப்பெற வேண்டும் எனக்கூறி நொச்சி நகருக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்த பூபாலன் மற்றும் அவனது நண்பர்களுக்கும் கார்த்திக் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த தகறாரில் பூபாலன் அவனது நண்பர் சூர்யா மற்றும் இருவருடன் சேர்ந்து கார்த்திக்கை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மயக்க நிலையில் கிடந்த கார்த்திக்கை அவனது நண்பர்கள் ராஜேஷ், விக்னேஷ் மற்றும் ஆகாஷ் உள்ளிட்டோர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து அங்கு வந்த மயிலாப்பூர் காவல்துறையினர் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு கார்த்திக்கை கத்தியால் குத்தி கொலை செய்த பூபாலன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
Last Updated : Oct 28, 2019, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.