வியாசர்பாடி மைசூர் மஹால் இ.எச்.சாலை அருகே மாதவரம் மதுவிலக்கு காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த ஒருவரிடம் இருந்து, மற்றொருவர் கஞ்சா வாங்கி செல்வதை கண்ட காவலர்கள் உடனடியாக அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அதில் ஒருவர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சரவணன் (32) என்பதும், உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுவதும் தெரிந்தது. இவர் வியாசர்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்று வந்துள்ளார். மேலும், கஞ்சா வாங்க வந்தவர் கொடுங்கையூரை சேர்ந்த நூர்முகமது (33) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
![கஞ்சா விற்ற உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9464299_lawyer.jpeg)
இதனையடுத்து, கஞ்சா விற்ற வழக்கறிஞர் சரவணன் மற்றும் வாங்க வந்த நூர்முகமது ஆகியோரை எம்.கே.பி. நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களிடம் தொடர் விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்திலிருந்து தப்பிய திருடர்கள்!