ETV Bharat / jagte-raho

இரும்பு கேட் சரிந்து விபத்து; சிகிச்சை பலனின்றி 45 நாட்களுக்கு பிறகு 3 வயது சிறுவன் உயிரிழப்பு

author img

By

Published : Oct 17, 2019, 10:43 AM IST

சேலம்: ஊராட்சிமன்ற கட்டடத்தில் உள்ள இரும்பு கேட் சரிந்து விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி 45 நாட்களுக்கு பிறகு இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

Grill Gate Falls on boy Dead in Salem

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புளுதிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன், ராதிகா தம்பதியினர். இவர்களுக்கு ஹரிபிரசாத் என்ற மூன்று வயது மகன் உள்ளார். சிறுவன் ஹரிபிரசாத்தை தினமும் வீட்டிற்கு அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டட பகுதியில் விளையாடச் செய்வது வழக்கம்.

இதேபோல், கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் ஊராட்சி மன்ற கட்டடம் அருகே சென்று அங்கு உள்ள இரும்பு கேட்டில் ஏறி விளையாடினான். அப்போது, இரும்பு கேட்சரிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில், சிறுவன் தலையில் பலத்த காயமடைந்து சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவமனையில் வேதனையுடன் இருக்கும் உறவினர்கள்

அங்கே சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி 45 நாட்களுக்கு பின்னர் சிறுவன் ஹரிபிரசாத் இன்று அதிகாலை உயிரிழந்தான். இதையடுத்து, சிறுவன் ஹரிபிரசாத் உடல் உடற்கூறாய்வு செய்யவதற்காக பிணக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் திரளாக மருத்துவமனைக்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பேனர் கடையில் சிறுவர்கள் கைவரிசை - 50,000 ரூபாய் திருட்டு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புளுதிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன், ராதிகா தம்பதியினர். இவர்களுக்கு ஹரிபிரசாத் என்ற மூன்று வயது மகன் உள்ளார். சிறுவன் ஹரிபிரசாத்தை தினமும் வீட்டிற்கு அருகில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டட பகுதியில் விளையாடச் செய்வது வழக்கம்.

இதேபோல், கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் ஊராட்சி மன்ற கட்டடம் அருகே சென்று அங்கு உள்ள இரும்பு கேட்டில் ஏறி விளையாடினான். அப்போது, இரும்பு கேட்சரிந்து சிறுவன் மீது விழுந்தது. இதில், சிறுவன் தலையில் பலத்த காயமடைந்து சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவமனையில் வேதனையுடன் இருக்கும் உறவினர்கள்

அங்கே சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி 45 நாட்களுக்கு பின்னர் சிறுவன் ஹரிபிரசாத் இன்று அதிகாலை உயிரிழந்தான். இதையடுத்து, சிறுவன் ஹரிபிரசாத் உடல் உடற்கூறாய்வு செய்யவதற்காக பிணக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் திரளாக மருத்துவமனைக்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பேனர் கடையில் சிறுவர்கள் கைவரிசை - 50,000 ரூபாய் திருட்டு!

Intro:இரும்பு கேட் விழுந்து 3 வயது சிறுவன் சாவு.
45 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு இன்று அதிகாலை இறந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 3 வயது சிறுவன் ஊராட்சிமன்ற கட்டிடத்தில் உள்ள கிரில் கேட்டில் விளையாடியபோது கிரில் கேட் சரிந்து விழுந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று அதிகாலை இறந்துவிட்டான்.


Body:சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ளது புளுதிகுட்டை. இந்த பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி ராதிகா இவர்களுக்கு ஹரிபிரசாத் என்ற மூன்று வயது மகன் இருந்தான். இந்த சிறுவன் ஹரிபிரசாத் தினமும் வீட்டருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிட பகுதிக்குச் சென்று விளையாடுவான்.

இது போல கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஹரிபிரசாத் ஊராட்சி மன்ற கட்டிட அருகே சென்றான். பிறகு அங்கு உள்ள இரும்பு கிரில் கேட்டில் ஏறி விளையாடினான். அப்போது இரும்பு கேட் கிரில் கேட் சரிந்து சிறுவன் மீது விழுந்தது.

இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த அடிபட்டது. இதனால் சிறுவன் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இங்கே சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி 45 நாட்களுக்கு பின்னர் சிறுவன் அறிவுசார் இன்று அதிகாலை இறந்துவிட்டான்.

இந்த விபத்தை அறிந்த வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இறந்த சிறுவன் அடி பிரசாத் சடலம் உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரளாக மருத்துவமனைக்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.