ETV Bharat / jagte-raho

பெண் பார்க்கச் சென்றவர்கள் 4 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 23, 2020, 12:06 AM IST

திண்டுக்கல்: கார் டயர் வெடித்து நிலைதடுமாறி மரத்தில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

4 பேர் உயிரிழப்பு
4 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அத்தப்பகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் மணிவேல்(30) என்பவருக்கு பெண் பார்ப்பதற்காக பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு இரண்டு கார்களில் சென்றுள்ளனர். அதில் ஒரு காரை மாப்பிள்ளை மணிவேல் ஓட்டிச் சென்றுள்ளார்.

பழனி அருகே கரடிக்கூட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் அவரது தந்தை மணிவேல், சித்தப்பா நடராஜ், தாத்தா கருப்பணன், பாட்டி முத்தம்மாள்‌ ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கார் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் படுகாயங்களுடன் நடராஜன் மனைவி மகாலட்சுமி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து பழனி தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ”நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அத்தப்பகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகன் மணிவேல்(30) என்பவருக்கு பெண் பார்ப்பதற்காக பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு இரண்டு கார்களில் சென்றுள்ளனர். அதில் ஒரு காரை மாப்பிள்ளை மணிவேல் ஓட்டிச் சென்றுள்ளார்.

பழனி அருகே கரடிக்கூட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது கார் டயர் வெடித்ததில் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் அவரது தந்தை மணிவேல், சித்தப்பா நடராஜ், தாத்தா கருப்பணன், பாட்டி முத்தம்மாள்‌ ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கார் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் படுகாயங்களுடன் நடராஜன் மனைவி மகாலட்சுமி பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்து குறித்து பழனி தாலுகா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ”நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.