ETV Bharat / jagte-raho

'கோவையில் பெண்ணை கொலை செய்துவிட்டு கடைக்கு தீ'

author img

By

Published : Oct 19, 2019, 6:31 PM IST

கோவை: மயிலேரிபாளையம் பகுதியில் பெண்ணை கொலை செய்துவிட்டு அவரது மளிகைக் கடைக்கு தீவைத்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Woman killed

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் (60), தேவகி (55) தம்பதி. ஜெயபால் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மயிலேரிபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகின்றார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஜெயபால் தனது சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், கடையில் தேவகி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், தேவகியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த அரை சவரன் நகையைப் பறித்துச் சென்றனர்.

மேலும் தடயங்களை அழிக்கும் வகையில் சடலத்தைச் சுற்றி மிளகாய்ப்பொடி தூவியும் மளிகைக் கடைக்கு தீவைத்தும் தப்பிச் சென்றுள்ளனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவயிடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது, தேவகி கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக இருந்தது தெரியவந்தது.

Woman killed

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் கொடுத்த தகவலின் பேரில் நிகழ்விடம் சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர், தேவகியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், தடயங்களைச் சேகரித்த காவல் துறையினர், நகைக்காக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் வெட்டுக் காயங்களுடன் பிணமாக மீட்பு!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் (60), தேவகி (55) தம்பதி. ஜெயபால் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மயிலேரிபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவருகின்றார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஜெயபால் தனது சொந்த ஊருக்குச் சென்ற நிலையில், கடையில் தேவகி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், தேவகியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த அரை சவரன் நகையைப் பறித்துச் சென்றனர்.

மேலும் தடயங்களை அழிக்கும் வகையில் சடலத்தைச் சுற்றி மிளகாய்ப்பொடி தூவியும் மளிகைக் கடைக்கு தீவைத்தும் தப்பிச் சென்றுள்ளனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவயிடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது, தேவகி கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக இருந்தது தெரியவந்தது.

Woman killed

இதையடுத்து தீயணைப்புத் துறையினர் கொடுத்த தகவலின் பேரில் நிகழ்விடம் சென்ற செட்டிபாளையம் காவல் துறையினர், தேவகியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், தடயங்களைச் சேகரித்த காவல் துறையினர், நகைக்காக கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் வெட்டுக் காயங்களுடன் பிணமாக மீட்பு!

Intro:கோவை அருகே அரை சவரன் நகைக்காக மளிகை கடை உரிமையாளரின் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மளிகைக்கடைக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..Body:திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால்(60) தேவகி (55) தம்பதியினர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவை மயிலேரிபாளையம் தொப்பம்பாளையம் சாலையில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இருவரும் கடையிலேயே வசித்து வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஜெயபால் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தேவகி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஜெயபாலின் கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தேவகியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அவர் காதில் அணிந்திருந்த அரை பவுன் நகையை பறித்துச் சென்றனர். மேலும் தடயங்களை அழிக்கும் வகையில் சடலத்தை சுற்றியும் மிளகாய் பொடி தூவி விட்டதுடன் மளிகை கடைக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். நள்ளிரவில் மளிகை கடையில் தீப்பற்றி எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது தேவகி கழுத்தறுக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்பு துறையினர் செட்டிபாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவல் துறையினர், தேவகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயங்களை சேகரித்த போலீசார், சம்பவ இடத்தில் தலையணையின் கீழ் வைக்கப்பட்டிருந்த 6000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், மூதாட்டி நகைக்க தான் கொல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து செட்டிபாளையம் போலீசார் டிஎஸ்பி பாலமுருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.