ETV Bharat / jagte-raho

4ஆவதும் மகள்: விரக்தியில் உயிரைவிட்ட தந்தை!

author img

By

Published : Dec 5, 2020, 11:06 AM IST

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நான்காவதும் பெண் குழந்தை பிறந்ததால், விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4ஆவதும் மகள்: விரக்தியில் உயிரை விட்ட தந்தை!
4ஆவதும் மகள்: விரக்தியில் உயிரை விட்ட தந்தை!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் அருகேயுள்ள துர்வாரா கிராமத்தில் வசித்துவந்தவர் வினோத் அஹிர்வார். விவசாயியான இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் வினோத்தின் மனைவி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதனால் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என வினோத் அடிக்கடி சொல்லி வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வினோத் மனைவி நான்காவதும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த வினோத் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால், உயிரை மாய்த்துக்கொள்வது எந்தவகையில் நியாயம். இனி யார் அவரின் பிள்ளைகளைக் காப்பாற்றுவார்கள் என அக்கம்பக்கத்து வீட்டினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...அபகரித்த நிலத்திற்கான பணம் வேண்டும் - குடும்பத்துடன் குடிநீர் தொட்டிக்கு கீழே குடியேறிய மெக்கானிக்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் அருகேயுள்ள துர்வாரா கிராமத்தில் வசித்துவந்தவர் வினோத் அஹிர்வார். விவசாயியான இவருக்கும், இவரது மனைவிக்கும் ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் வினோத்தின் மனைவி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதனால் வயிற்றிலிருக்கும் குழந்தை ஆண் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் என வினோத் அடிக்கடி சொல்லி வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது வினோத் மனைவி நான்காவதும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த வினோத் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால், உயிரை மாய்த்துக்கொள்வது எந்தவகையில் நியாயம். இனி யார் அவரின் பிள்ளைகளைக் காப்பாற்றுவார்கள் என அக்கம்பக்கத்து வீட்டினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க...அபகரித்த நிலத்திற்கான பணம் வேண்டும் - குடும்பத்துடன் குடிநீர் தொட்டிக்கு கீழே குடியேறிய மெக்கானிக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.