ETV Bharat / jagte-raho

பிரபல நடிகை கணவர் தூக்கிட்டு தற்கொலை! - துணை சீரியல் நடிகர் தற்கொலை

வேலூர்: பிரபல நடிகை ராகவியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

chennai Serial actoress husband suicide in Vellore
author img

By

Published : Oct 24, 2019, 10:57 PM IST

Updated : Oct 24, 2019, 11:48 PM IST

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை மரத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஆண் சடலத்தின் பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை வைத்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவர் சென்னையை அடுத்த வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் சசிகுமார் (46) என்றும், இவர் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது. தொழில் ரீதியாக இருந்த கடன் சுமையால் கேமராவை திருடியதாக தகவல் பரப்பியதால் மனமுடைந்த சசிகுமார், வேலூர் ஜோலார்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

சசிகுமார் பிரபல நடிகை ராகவியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமார் உடலை கைப்பற்றிய ஜோலார்பேட்டை காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்திப்பு பேருந்து நிலையம் அருகே உள்ள ஏரிக்கரை மரத்தில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஆண் சடலத்தின் பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை வைத்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவர் சென்னையை அடுத்த வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் சசிகுமார் (46) என்றும், இவர் சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது. தொழில் ரீதியாக இருந்த கடன் சுமையால் கேமராவை திருடியதாக தகவல் பரப்பியதால் மனமுடைந்த சசிகுமார், வேலூர் ஜோலார்பேட்டை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

சசிகுமார் பிரபல நடிகை ராகவியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகுமார் உடலை கைப்பற்றிய ஜோலார்பேட்டை காவல்துறையினர் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Intro:ஜோலார்பேட்டை அருகே சென்னையைச் சேர்ந்த துணை சீரியல் நடிகர் தூக்கு மாட்டி தற்கொலைBody:

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சென்னையைச் சேர்ந்த தேவராஜ் மகன் சசிகுமார் வயது 46 சீரியல் துணை நடிகராக உள்ளார். இவர் சென்னையை அடுத்த வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகபட்டு சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில் மூலம் வந்தடைந்துள்ளார். இந்நிலையில் சசிகுமார் ஜோலையார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழி சாலையின் அருகே உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அருகே உள்ள பொதுமக்கள் ஜோலையார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.Conclusion:
Last Updated : Oct 24, 2019, 11:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.