ETV Bharat / jagte-raho

கத்தி முனையில் கைப்பேசி பறிப்பு; இருவர் கைது!

author img

By

Published : Sep 5, 2020, 2:40 PM IST

சஞ்சயிடம் இருந்த ரூ. 13 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசியைப் பறித்துகொண்டு தானியில் (ஆட்டோ) இருவர் தப்பிச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து, அவர்களிடம் இருந்து கைப்பேசி, தானி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

திருவொற்றியூர் வழிப்பறி கொள்ளையர்கள்
திருவொற்றியூர் வழிப்பறி கொள்ளையர்கள்

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி, கைப்பேசி பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்

சென்னை, திருவொற்றியூர் பி.கே.என் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் (17). இவர் நேற்று முன்தினம் கார்கில் நகரிலுள்ள நண்பரை காணச் சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி சஞ்சயிடம் இருந்த ரூ,13 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசியைப் பறித்துகொண்டு தானியில் (ஆட்டோ) தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சஞ்சய் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இச்சூழலில், சடையங்குப்பம் பாட்டையை நகரைச் சேர்ந்த பாபு(22), என்பவரை இந்த வழிப்பறி தொடர்பாக கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த தினேஷை திருவொற்றியூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

உதவி ஆய்வாளர் மணிமாறன், இம்மானுவேல் ஆகியோர் தலைமையில் இயங்கிய தனிப்படை தலைமறைவாகி இருந்த தினேஷைக் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்த கைப்பேசி, வழிப்பறிக்கு பயன்படுத்திய தானியையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை: திருவொற்றியூர் பகுதியில் கத்தி முனையில் மிரட்டி, கைப்பேசி பறித்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்

சென்னை, திருவொற்றியூர் பி.கே.என் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் (17). இவர் நேற்று முன்தினம் கார்கில் நகரிலுள்ள நண்பரை காணச் சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி சஞ்சயிடம் இருந்த ரூ,13 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசியைப் பறித்துகொண்டு தானியில் (ஆட்டோ) தப்பிச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சஞ்சய் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இச்சூழலில், சடையங்குப்பம் பாட்டையை நகரைச் சேர்ந்த பாபு(22), என்பவரை இந்த வழிப்பறி தொடர்பாக கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த தினேஷை திருவொற்றியூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

உதவி ஆய்வாளர் மணிமாறன், இம்மானுவேல் ஆகியோர் தலைமையில் இயங்கிய தனிப்படை தலைமறைவாகி இருந்த தினேஷைக் கண்டுபிடித்து அவர்களிடம் இருந்த கைப்பேசி, வழிப்பறிக்கு பயன்படுத்திய தானியையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.