ETV Bharat / jagte-raho

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு - தேர்ச்சி பெற பணம் கொடுத்த நால்வர் கைது

author img

By

Published : Feb 4, 2020, 8:39 PM IST

சென்னை: குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ராமேஸ்வரத்தில் காவலர் சித்தாண்டி இன்று கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் நான்கு பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

arrest
arrest

2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் இதுவரை குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டிற்காக ஒன்பது நபர்களும், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 16 நபர்களும் என, மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த, காவலர் சித்தாண்டியை ராமேஸ்வரத்தில் இன்று காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றது தெரிய வந்ததன் அடிப்படையில், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தீபக், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், அருண் பாலாஜி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த தேவி ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் தீபக் எட்டு லட்சம் ரூபாயையும், வினோத் குமார் ஒன்பது லட்சம் ரூபாயையும், இவ்வழக்கில் தலைமறைவாகவுள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளனர். அதேபோல் மற்ற இருவரும் தலா 13 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இதில் யாரையெல்லாம் அவர்கள் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்தும், அந்தப் பணம் யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு: சிபிசிஐடியிடம் சிக்கிய சித்தாண்டி

2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்திருப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இவ்வழக்கில் இதுவரை குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டிற்காக ஒன்பது நபர்களும், குரூப் 4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக 16 நபர்களும் என, மொத்தம் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கியக் குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த, காவலர் சித்தாண்டியை ராமேஸ்வரத்தில் இன்று காவல் துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றது தெரிய வந்ததன் அடிப்படையில், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தீபக், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், அருண் பாலாஜி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த தேவி ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் தீபக் எட்டு லட்சம் ரூபாயையும், வினோத் குமார் ஒன்பது லட்சம் ரூபாயையும், இவ்வழக்கில் தலைமறைவாகவுள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளனர். அதேபோல் மற்ற இருவரும் தலா 13 லட்சம் ரூபாய் கொடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இதில் யாரையெல்லாம் அவர்கள் தொடர்பு கொண்டார்கள் என்பது குறித்தும், அந்தப் பணம் யாருக்கெல்லாம் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பது குறித்தும், கைது செய்யப்பட்ட நால்வரிடமும் சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முறைகேடு: சிபிசிஐடியிடம் சிக்கிய சித்தாண்டி

Intro:Body:டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்......*

கடந்த 2017 ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்து இருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுவரை குரூப்-2 ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 9 நபர்களும் குரூப்-4 தேர்வில் 16 நபர்களும் என மொத்தம் 25 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.மேலும் இதில் முக்கிய குற்றவாளியாக தேடி வந்த காவலர் சித்தாண்டியை ராமேஸ்வரத்தில் இன்று போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்று குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றதாக கூறி சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தீபக், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த வினோத்குமார், அருண் பாலாஜி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த தேவி ஆகியோர் நான்கு பேர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரிய வந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர் .

இவர்களில் முதலிரண்டு பேரும் குரூப்-2ஏ தேர்வில் இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரிடம் தலா 8 லட்சம், 9 லட்சம் கொடுத்துள்ளனர். அதேபோல் மற்ற இருவரும் தலா 13 லட்சம் கொடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நான்கு பேரையும் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.