ETV Bharat / jagte-raho

ஊரடங்கு காலத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பலே திருடன் கைது!

கரோனா ஊரடங்கை பயன்படுத்தி, பூட்டிக் கிடக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம் உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்த திருடனை காவலர்கள் கைது செய்தனர்.

author img

By

Published : Oct 9, 2020, 12:20 AM IST

theft arrest
theft arrest

சென்னை : சென்னை நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பூட்டி இருக்கும் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, முகப்பேர் விஜிபி நகரில் வசிக்கும், சுதாகர் ரெட்டி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பக்கத்து வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சி நடந்தது.

இதேபோல், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முகப்பேர் மேற்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த கேஸ் ஏஜென்சி உரிமையாளர் செல்வி வீட்டில் 18 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போனது.

இதற்கிடையில் கடந்த 25 ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் சுனில் என்பவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருள்களும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இவ்வாறு நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க அண்ணா நகர் தனிப்படை காவலர்கள், அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரே கும்பல் இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், அந்தக் கொள்ளைக் கும்பல் நொளம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை காவலர்கள், அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது, வீடு பூட்டி இருந்ததால் மூன்று நாள்களாக அந்த வீட்டை கண்காணித்து, அங்கு வந்த நபரை கைது விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டது, வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜன் (எ) காமராஜ் (44) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் மீது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆவடியில் தன் கூட்டாளிகளோடு சேர்ந்து கொள்ளையில் ஈடுப்பட்டு கைதானதும், பிறகு காவலர்களிடம் சிக்காமல் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.

ராஜன் கும்பல், ஒரு பகுதியில் கொள்ளை அடிப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, அந்தப் பகுதிகளை முழுவதுமாக நோட்டம் விட்டு பின் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அதேபோல், கொள்ளை அடித்தவுடன், நகை பணத்தோடு சென்றால் சிக்கி கொள்வார்கள் என்பதால், கொள்ளை அடித்தவுடன் அருகில் உள்ள பூங்கா மற்றும் காலி இடங்களில் தங்கிவிட்டு, பொழுது விடிந்ததும் மக்களோடு மக்களாக அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொள்ளை அடிக்கும் நகைகளை, கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்களிடம் கொடுத்து அடகுகடைகளில் அடமானம் வைத்து, அந்தப் பணத்தில் தனது மனவளர்ச்சி குன்றிய 22 வயது மகனுக்கு செலவு செய்தும், மீதி பணத்தில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார் ராஜன்.

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்

தொடர் விசாரணையில், கொள்ளை அடித்த நகைகளை ஆந்திராவில் உள்ள தனது உறவினரிடம் கொடுத்து வைத்து இருப்பதாக ராஜன் திசை திருப்பியுள்ளார்.

நகைகளை மீட்க, ஆந்திரா விரைந்த தனிப்படை காவலர்கள் ராஜனின் உறவினர் சீனிவாசனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், தனக்கும் ராஜனுக்கும் தற்போது தொடர்பு இல்லை என்றும், ராஜனுக்கு சிவவிநாயகம் என்ற ஒரு தம்பி இருப்பதாகவும் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் சிவவிநாயகத்தை தேடிய போது, அவர் கிடைக்காததால் நொளம்பூரிலுள்ள அவரது ரகசிய காதலியான வடமாநில பெண்ணின் வீட்டில் காவலர்கள் சோதனை நடத்தினர். இந்நிலையில், ராஜன், சிவவிநாயகம் அவரது ரகசிய காதலி ஆகிய மூவரும் நொளம்பூரில் வாடகை வீடு எடுத்து தங்கி, தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து சென்னையில் உள்ள பல்வேறு அடகுக் கடைகளில், அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்ட காவலர்கள், 34 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருள்களை மீட்டனர்.

ராஜனின் திருட்டு நகைகளை வாங்கி விற்றதாக அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அடகு கடை உரிமையாளர் பவர்லால் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

இவரின் மூலமாக மட்டுமே 34 சவரன் நகைகளை கொள்ளையன் ராஜன் விற்று பணமாக்கியதும் தெரியவந்துள்ளது.

கொள்ளை அடித்த 50 சவரன் நகைகளுடன் தலைமறைவாகியுள்ள ராஜனின் தம்பியை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜன் என்கிற காமராஜ் கடந்த 25 ஆண்டுகளாக வீடுகளின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்து வருகிறார். இவர், கடப்பாரை கொண்டு கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவர் என்பதும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் பலமுறை சிறைக்கு சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கஞ்சா கடத்தல் வழக்கில் சரியாக தகவல் தெரிவிக்காததால் எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

சென்னை : சென்னை நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் முதல் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று பூட்டி இருக்கும் வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி, முகப்பேர் விஜிபி நகரில் வசிக்கும், சுதாகர் ரெட்டி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பக்கத்து வீட்டின் பூட்டை உடைத்தும் கொள்ளை முயற்சி நடந்தது.

இதேபோல், செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முகப்பேர் மேற்கு வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த கேஸ் ஏஜென்சி உரிமையாளர் செல்வி வீட்டில் 18 சவரன் நகை, 8 கிலோ வெள்ளி பொருள்கள் திருடு போனது.

இதற்கிடையில் கடந்த 25 ஆம் தேதி மென்பொருள் பொறியாளர் சுனில் என்பவர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள், ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருள்களும் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

இவ்வாறு நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடிக்க அண்ணா நகர் தனிப்படை காவலர்கள், அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரே கும்பல் இந்தத் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும், அந்தக் கொள்ளைக் கும்பல் நொளம்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் தங்கியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை காவலர்கள், அந்த வீட்டிற்கு சென்று பார்த்த பொழுது, வீடு பூட்டி இருந்ததால் மூன்று நாள்களாக அந்த வீட்டை கண்காணித்து, அங்கு வந்த நபரை கைது விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டது, வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜன் (எ) காமராஜ் (44) என்பது தெரிய வந்தது.

மேலும் இவர் மீது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆவடியில் தன் கூட்டாளிகளோடு சேர்ந்து கொள்ளையில் ஈடுப்பட்டு கைதானதும், பிறகு காவலர்களிடம் சிக்காமல் பல இடங்களில் கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.

ராஜன் கும்பல், ஒரு பகுதியில் கொள்ளை அடிப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, அந்தப் பகுதிகளை முழுவதுமாக நோட்டம் விட்டு பின் கொள்ளை சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

அதேபோல், கொள்ளை அடித்தவுடன், நகை பணத்தோடு சென்றால் சிக்கி கொள்வார்கள் என்பதால், கொள்ளை அடித்தவுடன் அருகில் உள்ள பூங்கா மற்றும் காலி இடங்களில் தங்கிவிட்டு, பொழுது விடிந்ததும் மக்களோடு மக்களாக அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொள்ளை அடிக்கும் நகைகளை, கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்களிடம் கொடுத்து அடகுகடைகளில் அடமானம் வைத்து, அந்தப் பணத்தில் தனது மனவளர்ச்சி குன்றிய 22 வயது மகனுக்கு செலவு செய்தும், மீதி பணத்தில் உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளார் ராஜன்.

மீட்கப்பட்ட நகைகள்
மீட்கப்பட்ட நகைகள்

தொடர் விசாரணையில், கொள்ளை அடித்த நகைகளை ஆந்திராவில் உள்ள தனது உறவினரிடம் கொடுத்து வைத்து இருப்பதாக ராஜன் திசை திருப்பியுள்ளார்.

நகைகளை மீட்க, ஆந்திரா விரைந்த தனிப்படை காவலர்கள் ராஜனின் உறவினர் சீனிவாசனை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், தனக்கும் ராஜனுக்கும் தற்போது தொடர்பு இல்லை என்றும், ராஜனுக்கு சிவவிநாயகம் என்ற ஒரு தம்பி இருப்பதாகவும் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

காவலர்கள் சிவவிநாயகத்தை தேடிய போது, அவர் கிடைக்காததால் நொளம்பூரிலுள்ள அவரது ரகசிய காதலியான வடமாநில பெண்ணின் வீட்டில் காவலர்கள் சோதனை நடத்தினர். இந்நிலையில், ராஜன், சிவவிநாயகம் அவரது ரகசிய காதலி ஆகிய மூவரும் நொளம்பூரில் வாடகை வீடு எடுத்து தங்கி, தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து சென்னையில் உள்ள பல்வேறு அடகுக் கடைகளில், அடகு வைக்கப்பட்டிருந்த நகைகளை மீட்ட காவலர்கள், 34 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருள்களை மீட்டனர்.

ராஜனின் திருட்டு நகைகளை வாங்கி விற்றதாக அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த அடகு கடை உரிமையாளர் பவர்லால் என்பவரையும் கைது செய்துள்ளனர்.

இவரின் மூலமாக மட்டுமே 34 சவரன் நகைகளை கொள்ளையன் ராஜன் விற்று பணமாக்கியதும் தெரியவந்துள்ளது.

கொள்ளை அடித்த 50 சவரன் நகைகளுடன் தலைமறைவாகியுள்ள ராஜனின் தம்பியை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜன் என்கிற காமராஜ் கடந்த 25 ஆண்டுகளாக வீடுகளின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்து வருகிறார். இவர், கடப்பாரை கொண்டு கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவர் என்பதும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் பலமுறை சிறைக்கு சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கஞ்சா கடத்தல் வழக்கில் சரியாக தகவல் தெரிவிக்காததால் எஸ்.ஐ. பணியிடை நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.