ETV Bharat / jagte-raho

திருச்சியில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை... 8 பேர் கைது!

author img

By

Published : Feb 11, 2020, 9:35 PM IST

திருச்சி: சட்ட விரோதமாக இரண்டு ஆண் குழந்தைகளை விற்பனை செய்த 6 பெண்கள் உட்பட 8 பேரை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

children sale
children sale

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்தவர்கள் கோவிந்தன் - அஸ்வினி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை வளர்த்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு, காவல்துறையினருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஒருவர், கோவிந்தன் - அஸ்வினி தம்பதி சட்டவிரோதமாக குழந்தையை வளர்ப்பதாகப் புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அஜிம் தலைமையிலான குழந்தைகள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அஸ்வினி வீட்டுக்குச் சென்று விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். பின்னர், பிப்ரவரி 3ஆம் தேதி திருவெறும்பூர் காவலர்களுடன் சென்ற குழந்தைகள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அஸ்வினியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிவந்த வெண்ணிலா (42), அவருக்கு உதவிய லூர்து மேரி (55) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் குழந்தையை ரூ.82 ஆயிரத்துக்கு விற்பனை செய்த புவனேஸ்வரி (42) என்பவரையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியைச் சேர்ந்த தர்மராஜ் (30) என்பவர் காவலாளியாகவும், அவரது மனைவி ராணி (27) கட்டடத் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ராணி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், கேட்பவர்களிடம் வயிற்றில் கட்டி உள்ளது என்று மறைத்துள்ளார்.

இதனிடையே, ஜனவரி மாதம் 13ஆம் தேதி வீட்டிலேயே ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள், சக கட்டடத் தொழிலாளர்கள் ராணியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அப்போது ராணி தனது பெயர் சிவகாமி என்றும், கணவர் பெயர் பாலசுப்பிரமணியன் என்றும் தான் துறையூரைச் சேர்ந்தவர் என்றும் தவறான முகவரியைக் கொடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பாகவே, ராணி மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளார்.

children sale
children sale

இதனால் திருச்சி மருத்துவமனை அலுவலர்கள், துறையூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு ராணியின் முகவரியை விசாரணை செய்யுமாறு கூறினர். அதில் அந்த முகவரி போலி எனத் தெரியவந்தது. இந்நிலையில், சுகாதார செவிலி ஜெயசுந்தரி, ராணி வீட்டுக்குச் சென்றபோது, அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. மேலும் ராணியிடம் குழந்தை எங்கே? என்று ஜெயசுந்தரி கேட்டதற்கு, அக்கா வீட்டில் இருப்பதாகக் கூறினார். பின்னர் ராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் சிவகாமி என்ற பெயரில் வெளியேறியது ராணி தான் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்த ஜெயசுந்தரி, அவர்களுடன் ராணி வீட்டுக்குச் சென்று விசாரணை செய்தார். அப்போது 13 ஆண்டுகளாக குழந்தை இல்லாத, தனது உறவினரான துறையூரைச் சேர்ந்த குமார், சாரதா தம்பதியிடம் கொடுத்ததாகக் கூறினார். அதன் அடிப்படையில் ராணி, தர்மராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பின், இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய 8 பேரை திருச்சி 6ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் - தந்தை நாடகம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சேர்ந்தவர்கள் கோவிந்தன் - அஸ்வினி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தையை வளர்த்து வந்தனர். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு, காவல்துறையினருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஒருவர், கோவிந்தன் - அஸ்வினி தம்பதி சட்டவிரோதமாக குழந்தையை வளர்ப்பதாகப் புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் அஜிம் தலைமையிலான குழந்தைகள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அஸ்வினி வீட்டுக்குச் சென்று விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். பின்னர், பிப்ரவரி 3ஆம் தேதி திருவெறும்பூர் காவலர்களுடன் சென்ற குழந்தைகள் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அஸ்வினியைக் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிவந்த வெண்ணிலா (42), அவருக்கு உதவிய லூர்து மேரி (55) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் குழந்தையை ரூ.82 ஆயிரத்துக்கு விற்பனை செய்த புவனேஸ்வரி (42) என்பவரையும் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து, திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியைச் சேர்ந்த தர்மராஜ் (30) என்பவர் காவலாளியாகவும், அவரது மனைவி ராணி (27) கட்டடத் தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ராணி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால், கேட்பவர்களிடம் வயிற்றில் கட்டி உள்ளது என்று மறைத்துள்ளார்.

இதனிடையே, ஜனவரி மாதம் 13ஆம் தேதி வீட்டிலேயே ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மறுநாள், சக கட்டடத் தொழிலாளர்கள் ராணியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அப்போது ராணி தனது பெயர் சிவகாமி என்றும், கணவர் பெயர் பாலசுப்பிரமணியன் என்றும் தான் துறையூரைச் சேர்ந்தவர் என்றும் தவறான முகவரியைக் கொடுத்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன்பாகவே, ராணி மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளார்.

children sale
children sale

இதனால் திருச்சி மருத்துவமனை அலுவலர்கள், துறையூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு ராணியின் முகவரியை விசாரணை செய்யுமாறு கூறினர். அதில் அந்த முகவரி போலி எனத் தெரியவந்தது. இந்நிலையில், சுகாதார செவிலி ஜெயசுந்தரி, ராணி வீட்டுக்குச் சென்றபோது, அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. மேலும் ராணியிடம் குழந்தை எங்கே? என்று ஜெயசுந்தரி கேட்டதற்கு, அக்கா வீட்டில் இருப்பதாகக் கூறினார். பின்னர் ராணியை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது, திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் சிவகாமி என்ற பெயரில் வெளியேறியது ராணி தான் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்த ஜெயசுந்தரி, அவர்களுடன் ராணி வீட்டுக்குச் சென்று விசாரணை செய்தார். அப்போது 13 ஆண்டுகளாக குழந்தை இல்லாத, தனது உறவினரான துறையூரைச் சேர்ந்த குமார், சாரதா தம்பதியிடம் கொடுத்ததாகக் கூறினார். அதன் அடிப்படையில் ராணி, தர்மராஜை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதன்பின், இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய 8 பேரை திருச்சி 6ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பச்சிளம் குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் - தந்தை நாடகம்: அதிர்ச்சியளிக்கும் பின்னணி தகவல்

Intro:திருச்சியில் சட்ட விரோதமாக 2 ஆண் குழந்தைகளை விற்ற 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.Body:திருச்சி:

திருச்சியில் சட்ட விரோதமாக 2 ஆண் குழந்தைகளை விற்ற 6 பெண்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காமராஜர் தெருவை சேர்ந்த தம்பதிகள் கோவிந்தன்- அஸ்வினிக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிறந்து 102 தினங்களே ஆன ஆண் குழந்தையை வளர்த்து வந்தனர்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு போனில் தொடர்பு கொண்ட ஒருவர் அஸ்வினி சட்டவிரோதமாக ஒரு குழந்தையை வளர்ப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அஜிம் தலைமையிலான குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீசார் அஸ்வினி விட்டிற்கு வந்து விசாரனை செய்தனர். அஸ்வினி முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளார்.
பின்னர் கடந்த 3ஆம் தேதி திருவெறும்பூர் போலீசாருடன் சென்ற குழந்தைகள் தடுப்பு போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக திருச்சி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்த திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூரை சேர்ந்த வேலம்மாள் (எ) வெண்ணிலா (42) என்பவரையும், அவருக்கு உதவிய சுருளி கோவில் தெருவை சேர்ந்த லூர்து மேரி (55) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் குழந்தையை ரூ.82 ஆயிரத்திற்கு விற்ற பெட்டவாய்த்தலை அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் சேர்ந்த புவனேஸ்வரி (42) ஆகிய 5 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் கோவிந்தன் மட்டும் தலைமறைவாகி உள்ளார்.
இதே போன்று திருவெறும்பூர் அருகே உள்ள பனையக் குறிச்சி விசாலாட்சி நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (30). இவர் அந்தப் பகுதி காவலாளியாகவும், அவரது மனைவி ராணி (27) அந்தப் பகுதியில் கட்டட வேலை பார்த்து வந்தனர்.
இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ராணி கர்ப்பமாக இருந்துள்ளார். ஆனால் கேட்பவர்களிடம் வயிற்றில் கட்டி உள்ளது என்று தனது கர்ப்பத்தை மறைத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 13ம் தேதி விசாலாட்சி நகரில் உள்ள வீட்டிலேயே ராணி ஆண் குழந்தையை பெற்றுள்ளார்.
மறுநாள் ராணியை அந்த கட்டிடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அப்போது ராணி தனது பெயர் சிவகாமி என்றும், தனது கணவர் பெயர் பாலசுப்பிரமணியன் என்றும் தான் துறையூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தவறான விலாசத்தை கொடுத்துள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் இருந்து ராணியை மருத்துவர்கள் டிசார்ஜ் செய்வதற்கு முன்பு சொல்லிக்கொள்ளாமல் ராணி மருத்துவமனையை விட்டு வெளியேறி உள்ளார்.
இதனால் திருச்சி மருத்துவமனை அதிகாரிகள் துறையூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு துறையூர் விலாசத்தை விசாரணை செய்யுமாறு கூறியுள்ளனர். அப்போது விசாரணை செய்து பார்த்ததில் அந்த விலாசம் போலி என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சுகாதார செவிலியர் ஜெய சுந்தரி, ராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ராணியை உடல்நிலை ரொம்ப மோசமாக இருந்தது. மேலும் ஜெயசுந்தரி ராணியிடம் குழந்தை எங்கே? என்று கேட்டதற்கு, அக்கா வீட்டில் விட்டுள்ளதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறிய பதிலேயே கூறி உள்ளார்.
பின்னர் ராணியை ஜெயசுந்தரி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனை சேர்த்துள்ளார். ஒரு வாரம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையுடன் சிவகாமி என்ற பெயரில் வெளியேறியது ராணி தான் என்பது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் ஜெயசித்ரா திருச்சி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் அஜிம் ஆகியோர் நேரில் ராணி வீட்டில் விசாரனை செய்தனர். அப்போது 13 வருடங்களாக குழந்தைகள் இல்லாத
தனது உறவினரான துறையூர் அருகே உள்ள ஆர் புதுப்பெட்டியை சேர்ந்த குமார் (30), சாரதா (27) தம்பதியிடம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் ராணி, தர்மராஜை போலீசார் கைது செய்தனர்.
மேலும் துறையூர் ஆர். புதுப்பட்டியை சேர்ந்த குமார் மற்றும் சாரதாவை கைது செய்ததோடு அவர்களிடம் ரூ. 7 ஆயிரம் பணம் கொடுத்து குழந்தையை வாங்கியதை ஒத்துக்கொண்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் 4 பேரையும் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர்
இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய 8 பேரை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்'

தலைமறைவாகியுள்ள கோவிந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.