ETV Bharat / jagte-raho

இலங்கைக்கு கடத்தவிருந்த 2 டன் மஞ்சள் பறிமுதல்

author img

By

Published : Nov 1, 2020, 2:33 PM IST

ராமநாதபுரம்: மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த இரண்டு டன் மஞ்சளை கியூ பிரிவு காவல் துறையினர் கைப்பற்றினர்.

2 tons of turmeric confiscated
2 tons of turmeric confiscated

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், இன்று(நவ.1) மண்டபத்தில் இருந்து மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடல் பகுதியில் காவல் துறையினர் படகுகளில் தீவிர சோதனை நடத்தினர். இதில் வடக்கு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகு ஒன்றில் 73 சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் மஞ்சளை கண்டுபிடித்து படகுடன் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர், பிடிபட்ட மஞ்சள், படகு மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதன் சர்வதேச மதிப்பு 1 கோடிக்கு மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ட்விட்டரிலும் தமிழ்நாட்டைப் புறக்கணித்த மோடி!

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், இன்று(நவ.1) மண்டபத்தில் இருந்து மஞ்சள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கடல் பகுதியில் காவல் துறையினர் படகுகளில் தீவிர சோதனை நடத்தினர். இதில் வடக்கு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகு ஒன்றில் 73 சாக்கு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு டன் மஞ்சளை கண்டுபிடித்து படகுடன் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர், பிடிபட்ட மஞ்சள், படகு மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது கடத்தலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதன் சர்வதேச மதிப்பு 1 கோடிக்கு மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ட்விட்டரிலும் தமிழ்நாட்டைப் புறக்கணித்த மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.