ETV Bharat / jagte-raho

தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!

author img

By

Published : Sep 23, 2020, 3:08 PM IST

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

2 kg cannabis seized and two sellers arrested
கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான காவல்துறையினர் நேற்று (செப். 22) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி செவன்த்டே பள்ளி அருகே நடராஜபுரத்தைச் சேர்ந்த முனியசாமி (40), சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த முரளிதாஸ் காந்தி (40) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். மேலும், அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா, விற்பனைக்காக பயன்படுத்தி வந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பிரதமரால் பாராட்டப்பட்டவர் மீது கந்துவட்டி புகார்!

தூத்துக்குடி: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா தலைமையிலான காவல்துறையினர் நேற்று (செப். 22) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி செவன்த்டே பள்ளி அருகே நடராஜபுரத்தைச் சேர்ந்த முனியசாமி (40), சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த முரளிதாஸ் காந்தி (40) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தார். மேலும், அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா, விற்பனைக்காக பயன்படுத்தி வந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பிரதமரால் பாராட்டப்பட்டவர் மீது கந்துவட்டி புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.