ETV Bharat / jagte-raho

கடையின்  பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை

author img

By

Published : Apr 20, 2019, 3:25 PM IST

திருவள்ளூர்: திருநின்றவூர் தனியார் வங்கி அருகே இருந்த கடை ஓன்றில் 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தனியார் வங்கி அருகே இருந்த கடை பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை

திருநின்றவூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 48. இவர் திருநின்றவூர் சி.டி.எஸ் சாலையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று வியாபாரம் மூலம் கிடைத்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை இவர் கல்லாவில் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து இன்று காலை அந்த பகுதியில் சென்ற ஆட்டோகாரர் ஒருவர் இவரது கடையின் ஷெட்டர் பாதி திறந்து கிடப்பதை பார்த்து சந்தேகமடைந்துள்ளார். உடனடியாக கடையின் ஷட்டர் திறந்திருப்பது குறித்து ஆட்டோக்காரர் சீனிவாசனிடம் தகவல் அளித்துள்ளார்.

தனியார் வங்கி பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை

இதுகுறித்து, திருநின்றவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருநின்றவூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 48. இவர் திருநின்றவூர் சி.டி.எஸ் சாலையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று வியாபாரம் மூலம் கிடைத்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை இவர் கல்லாவில் வைத்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து இன்று காலை அந்த பகுதியில் சென்ற ஆட்டோகாரர் ஒருவர் இவரது கடையின் ஷெட்டர் பாதி திறந்து கிடப்பதை பார்த்து சந்தேகமடைந்துள்ளார். உடனடியாக கடையின் ஷட்டர் திறந்திருப்பது குறித்து ஆட்டோக்காரர் சீனிவாசனிடம் தகவல் அளித்துள்ளார்.

தனியார் வங்கி பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் கொள்ளை

இதுகுறித்து, திருநின்றவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையில் அந்தப் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Intro:திருநின்றவூரில் தனியார் வங்கி அருகே கடையின் பூட்டை உடைத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Body:திருநின்றவூரில் அடுத்த செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் 48.இவர் திருநின்றவூர் சி.டி.எஸ் சாலையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று கடையில் 15 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்களை வியாபாரம் செய்து உள்ளார்.பின்னர் வியாபாரமான பணத்தை கல்லாவில் அப்படியே விட்டுவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலை அந்த பகுதியில் சென்ற ஆட்டோகாரர் ஒருவர் கடையின் செட்டர் பாதி திறந்து கிடப்பதை பார்த்து சந்தேகமடைந்து உள்ளார். இவர் உடனடியாக செட்டரில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு சீனிவாசனிடம் கடையின் ஷட்டர் பாதியில் திறந்து இருப்பதாக பேசியுள்ளார்.இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் விரைவாக கடைக்கு வந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது நேற்று சம்பாதித்த ரூபாய் 15,000 பணம் கொள்ளை போனது தெரியவந்தது.இதுகுறித்து திருநின்றவூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண அந்தப் பகுதியில் சிசிடிவி காட்சிகள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். தனியார் வங்கி அருகில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:தனியார் வங்கி அருகில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.