ETV Bharat / jagte-raho

திண்டுக்கல் ரோப்கார் நிலையத்தில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு!

author img

By

Published : Nov 4, 2020, 7:40 PM IST

திண்டுக்கல்: பக்தர்கள் வந்துசெல்லும் ரோப்கார் நிலையம் அருகில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

15 feet snake
15 feet snake

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றி அடர்ந்த மரங்கள் நிறைந்து காணப்படுவதால் பாம்பு, மயில், குரங்குகள் உள்ளிட்ட பல உயிரினங்களை அதிகளவில் காண முடியும்.

ரோப்கார் நிலையத்தில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

இந்நிலையில் ரோப்கார் நிலையம் அருகில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்க முடியாமல் சுருண்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரோப்கார் நிலைய ஊழியர்கள், உடனடியாக வனத் துறையினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் அங்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள், மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத் துறை உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் கொண்டுசேர்த்தனர்.

இதையும் படிங்க: ஆட்டோ மூலம் கேரளாவிற்கு கஞ்சா கடத்திய மூவர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றி அடர்ந்த மரங்கள் நிறைந்து காணப்படுவதால் பாம்பு, மயில், குரங்குகள் உள்ளிட்ட பல உயிரினங்களை அதிகளவில் காண முடியும்.

ரோப்கார் நிலையத்தில் பிடிபட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு

இந்நிலையில் ரோப்கார் நிலையம் அருகில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்க முடியாமல் சுருண்டு கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரோப்கார் நிலைய ஊழியர்கள், உடனடியாக வனத் துறையினர், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் அங்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள், மலைப்பாம்பை உயிருடன் மீட்டு வனத் துறை உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் கொண்டுசேர்த்தனர்.

இதையும் படிங்க: ஆட்டோ மூலம் கேரளாவிற்கு கஞ்சா கடத்திய மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.