ETV Bharat / international

உலகளவில் கரோனா பாதிப்பு 2.33 கோடியாக உயர்வு - கரோனா பாதிரப்பு

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை  இரண்டு கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து  569க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 08 ஆயிரத்து 697 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

Global tracker
Global tracker
author img

By

Published : Aug 23, 2020, 3:22 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 569 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 08 ஆயிரத்து 697 பேர் ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்து 07 ஆயிரத்து 856 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 69 ஆயிரத்து 239 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்து 44 ஆயிரத்து 941ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 912 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 56 ஆயிரத்து 706 பேர் ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ்க்கு மொத்தம் 3 கோடிக்கு மேல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் வல்லுநர்கள் சோதனை திறனை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளனர். காரணம் இந்தியா தான் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மக்கள் தொகை கொண்ட நாடாகும்.

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. ஹாட் ஸ்பாட் விக்டோரியா மாகாணத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட்22) விக்டோரியாவில் மட்டும் 295 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தொடர்ந்து புதிதாக 397 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாளாக தென்கொரியாவில் மூன்றிலக்க எண்களில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 17 ஆயிரத்து 067 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலில் உள்ளது. இரண்டாவதாகப் பிரேசில் அடுத்தபடியாக இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.


இதையும் படிங்க: கரோனா காரணமாக 164 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழப்பு!

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கியது, கரோனா வைரஸ். இந்த வைரஸ் சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவால் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை இரண்டு கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 569 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்மூலம், உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 08 ஆயிரத்து 697 பேர் ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் இதுவரை ஒரு கோடியே 59 லட்சத்து 07 ஆயிரத்து 856 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 69 ஆயிரத்து 239 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 30 லட்சத்து 44 ஆயிரத்து 941ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 912 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 56 ஆயிரத்து 706 பேர் ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ்க்கு மொத்தம் 3 கோடிக்கு மேல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஆனால் வல்லுநர்கள் சோதனை திறனை அதிகரிக்க வலியுறுத்தியுள்ளனர். காரணம் இந்தியா தான் உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மக்கள் தொகை கொண்ட நாடாகும்.

ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. ஹாட் ஸ்பாட் விக்டோரியா மாகாணத்தில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து வருகிறது. நேற்று (ஆகஸ்ட்22) விக்டோரியாவில் மட்டும் 295 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தொடர்ந்து புதிதாக 397 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாளாக தென்கொரியாவில் மூன்றிலக்க எண்களில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 17 ஆயிரத்து 067 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவில் தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்தது. அதன் பிறகு சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகள் மே மாதத்தில் தளர்த்தப்பட்டன.இந்நிலையில் மக்கள் புழக்கம் அதிகரித்ததும் அங்கு இரண்டாம் கட்டப் பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலில் உள்ளது. இரண்டாவதாகப் பிரேசில் அடுத்தபடியாக இந்தியா உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் குறைந்தளவே இறப்பு விகிதங்கள் இருந்தாலும், இந்த நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.


இதையும் படிங்க: கரோனா காரணமாக 164 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.