ETV Bharat / international

இந்தியா-அமெரிக்கா நாடுகளின் ஒத்துழைப்பு, நோக்கத்திற்கும் அப்பாற்பட்டது: ஜெய்சங்கர்

இந்தியா-அமெரிக்கா நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு, இருதரப்பு நோக்கத்திற்கும் அப்பாற்பட்டது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

author img

By

Published : Apr 12, 2022, 12:36 PM IST

Updated : Apr 12, 2022, 7:57 PM IST

EAM Jaishankar
EAM Jaishankar

வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நேற்று (ஏப். 11) வாஷிங்டனில் நடைபெற்றது. இது நான்காவது 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நிகழ்வாகும். இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைசர் ஆண்டனி பிளின்கின், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையில், இந்தோ-பசிபிக், குவாட் கூட்டமைப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு அதன் இருதரப்பு நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது.

இரு நாடுகளும் உலகளாவிய பிரச்சினைகளான காலநிலை மாற்றம், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்தல், முக்கிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பது உள்ளிட்டைவைகளில் ஒன்றாக செயல்படும். இந்த நட்புறவு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் ஒத்துழைக்காத துறைகளே கிடையாது" என்றார்.

இதையும் படிங்க: 'நமது ஒற்றுமை அனைத்து பிரச்சனையையும் தீர்க்கும்' : அமெரிக்க அதிபர் - பிரதமர் மோடி கலந்துரையாடல்!

வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நேற்று (ஏப். 11) வாஷிங்டனில் நடைபெற்றது. இது நான்காவது 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நிகழ்வாகும். இதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைசர் ஆண்டனி பிளின்கின், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சு வார்த்தையில், இந்தோ-பசிபிக், குவாட் கூட்டமைப்பு, உக்ரைன், ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா-அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு அதன் இருதரப்பு நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது.

இரு நாடுகளும் உலகளாவிய பிரச்சினைகளான காலநிலை மாற்றம், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்தல், முக்கிய தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பது உள்ளிட்டைவைகளில் ஒன்றாக செயல்படும். இந்த நட்புறவு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் ஒத்துழைக்காத துறைகளே கிடையாது" என்றார்.

இதையும் படிங்க: 'நமது ஒற்றுமை அனைத்து பிரச்சனையையும் தீர்க்கும்' : அமெரிக்க அதிபர் - பிரதமர் மோடி கலந்துரையாடல்!

Last Updated : Apr 12, 2022, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.