ETV Bharat / international

போருக்கு அறைகூவல்: 2020ஐ அதிர்வுடன் ஆரம்பித்துவைத்த அமெரிக்கா

author img

By

Published : Jan 3, 2020, 8:18 PM IST

Updated : Jan 3, 2020, 9:58 PM IST

அமெரிக்கா அடுத்தாண்டு தேர்தலை சந்திக்கும் நிலையில், வாக்காளர்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்தும் யுக்தியில் ஈரான் பூதத்தை கிளப்பியுள்ளார் ட்ரம்ப். புத்தாண்டை அதகளமாக ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.

ட்ரம்ப்
ட்ரம்ப்

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தை அதிரடி அதகளத்துடன் ஆரம்பித்து வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் அமெரிக்க தாக்குதல் படையினர் ஈராக்கில் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானை சேர்ந்த ராணுவத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகனாகவும் வலம்வந்த குவாசிம் சொலைமானி பலியாகியுள்ளார்.

அமெரிக்க தாக்குதல் குறித்து ட்ரம்பின் ட்வீட்
அமெரிக்க தாக்குதல் குறித்து ட்ரம்பின் ட்வீட்

ஈரான் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட நாட்களாக நடைபெற்றுவந்த மோதல் போக்கு, தற்போது நேரடிப் போராக மாறும் அபாயத்தை இந்தத் தாக்குதல் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயலால், அமெரிக்கா ஈரான் மட்டுமல்லாமல், ஈராக், இஸ்ரேல், சிரியா, சவுதி அரேபியா என ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியமும் பதற்றநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள இந்தப் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிசமாக உயரும் அபாயம் உள்ளது. இதன் தாக்கம் தங்களின் பொருளாதாரத்தையும் எவ்வாறு பாதிக்கும் என அச்ச உணர்வில் ஈரான் - அமெரிக்காவின் நகர்வுகளை உலகநாடுகள் அனைத்தும் உற்றுநோக்கியுள்ளன.

ஈரான் - அமெரிக்கா மோதலின் பின்னணிக் கதை

ஈரான் - அமெரிக்காவுக்கிடையே நீண்ட நாட்களாகவோ மோதல் போக்கு நிலவிவருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்காவுடன் நட்பு நாடாகவே ஈரான் இருந்துவந்தது. 1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற உள்நாட்டு புரட்சி அமெரிக்க ஆதரவு அரசை நீக்கி, அமெரிக்காவுக்கு எதிரான அரசாட்சியை நிறுவியது. அதன்பின்னர் ஈரான்-ஈராக் யுத்தம், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, ஈரானின் அணு ஆயுத திட்டம் ஆகிய நிகழ்வுகளால் இரு நாட்டு உறவும் மோசமடைந்துவந்தது.

எண்ணெயும், அணு ஆயுதமும்தான் அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கின் மையப்புள்ளிகள். மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் மிக்க இரு முக்கிய நாடுகள் ஈரான் மற்றும் சவுதி அரேபியா. இரு நாடுகளும் இஸ்லாமிய மதத்தின் இரு துருவங்களான சன்னி, ஷியா பிரிவுகளின் தலைமையிடங்களாக திகழ்ந்துவருகின்றன. மதக் கொள்கையால் முரண்பட்டுள்ள இரு நாடுகளும் தங்களின் எண்ணெய் வளங்களைக் கொண்டு பொருளாதார ரீதியாக மோதிக்கொள்கின்றன.

கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

அமெரிக்கா, தனது எதிரியான ஈரானைக் கட்டம் கட்ட சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவின் அரசியல் எதிரியான ரஷ்யாவின் ஆதரவு ஈரானின் பக்கம். அத்துடன் ஈரானும் சவுதி அரேபியாவும் மோதிக்கொள்ளாமல், தனது அண்டை நாடுகளில் நீண்ட காலமாக மறைமுகமாக மோதலில் ஈடுபட்டுவருகின்றன. சிரியா, ஏமன், லிபியா, ஈராக் எனப் பல நாடுகளின் உள்நாட்டுப்போரை ஈரான் - சவுதி நாடுகள் தங்களின் யுத்தக் களங்களாக பயன்படுத்திவருகின்றன.

அமெரிக்கா - ஈரான் - சவுதி மோதல் போக்கால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதியும் பொருளாதாரமும் சீர்குலைந்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஒரு புதிய திருப்பத்தை சந்தித்தது.

ஈரானுடன் நல்லுறவை உருவாக்கும் நோக்கில், அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டுடன் வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கிக்கொள்வதாகவும், பதிலுக்கு ஈரான் தனது அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் ஒப்பந்தம் முடிவாகியது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய வல்லாதிக்கங்களும் உறுப்பு நாடுகளாகச் சேர்ந்துகொண்டன.

ஒப்பந்தத்துக்காக இணைந்த உலகநாடுகள்
ஒப்பந்தத்துக்காக இணைந்த உலகநாடுகள்

ட்ரம்பின் வருகையும் தலைகீழ் மாற்றமும்:

2017ஆம் ஆண்டு ஒபாமாவுக்குப்பின் ஆட்சிப் பொறுப்புக்குவந்த ட்ரம்ப், ஒபாமா செயல்படுத்திய பல்வேறு ஒப்பந்தங்கள் செல்லாது என திரும்பப்பெறத் தொடங்கினார். அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ட்ரம்ப், ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அள்ளி வீசினார். இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அழுத்தம் தந்தார்.

அமெரிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்
அமெரிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்

ட்ரம்பின் இந்தச் செயல்கள் ஈரான் பொருளாதாரத்தின் அடிமடியிலேயே கைவைக்கும் விதமாக மாறின. இதன் காரணமாக ஆத்திரமடைந்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடத் தொடங்கிய ஈரான், தனது அணு ஆயுத செயல்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்தியது. மேலும், கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு ஆத்திரமூட்டும் செயலை ஈராக் மண்ணில் ஈரான் மேற்கொண்டது.

உச்சம் தொட்ட மோதல்

ஈராக்கை படையெடுத்து சதாம் ஹுசைனின் ஆட்சியை நீக்கிய அமெரிக்கா, அங்கு புதிய அரசை நிறுவி அந்த அரசு செயல்பட பக்கபலமாக நின்று பயிற்சி அளித்துவருகிறது. ஈராக்கில் அமெரிக்க ஆதரவு அரசுக்கு எதிராக காதிப் ஹிஸ்போல்லா என்ற உள்நாட்டுக் கிளர்ச்சிப்படை செயல்பட்டுவருகிறது. இந்தக் கிளர்ச்சிப்படைக்கு ஆதரவாக ஈரானின் பாதுகாப்புப்படை செயல்படுகிறது. குறிப்பாக தற்போது உயிரிழ்ந்த ஈரானிய ராணுவத் தளபதி குவாசிம் சொலைமானி கதிப் ஹிஸ்போல்லா கிளர்ச்சிப்படைக்கு நேரடி உதவிகளை ஈராக்கிலிருந்து மேற்கொண்டார்.

ஈராக் கிளர்ச்சிப்படைத் தலைவர் அபு மஹ்தி அல் முஹ்தானிஸுடன் குவாசிம் சொலைமானி
ஈராக் கிளர்ச்சிப்படைத் தலைவர் அபு மஹ்தி அல் முஹ்தானிஸுடன் குவாசிம் சொலைமானி

இந்தக் கிளர்ச்சிப்படை சில நாட்களுக்கு முன்பு ஈராக் ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஹிஸ்போல்லா அமைப்பின் மீது பதில் தாக்குதல் நடத்தவே, கிளர்ச்சிப்படை வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஹிஸ்போல்லா கிளர்ச்சிப்படையினர், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் புகுந்து சூறையாடினர்.

பொறுமையிழந்த டொனால்ட் ட்ரம்ப், கிளர்ச்சிப்படையினரும் அதன் தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் ஈரான் அரசும் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரித்தார்.

அந்த எச்சரிக்கையை பிரகடனப்படுத்தும் விதமாக ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சொலைமானி, ஈராக் கிளர்ச்சிப்படைத் தலைவர் அபு மஹ்தி அல் முஹ்தானிஸ் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் ராணுவத் தளபதி சொலைமானி
ஈரான் ராணுவத் தளபதி சொலைமானி

அதிர்வலைகளில் உலகநாடுகள்:

ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் நிகழ்ந்துள்ள இந்த எதிர்பாராத தாக்குதல், ஈரானை உறையச் செய்துள்ளது. அமெரிக்கா ஈரானின் மீது பயங்கரவாதத்தை ஏவியுள்ளது. அந்நாட்டை சரியான விதத்தில் பழிவாங்குவோம் என ஈரான் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அமெரிக்கர்கள் ஈராக்கைவிட்டு அவசரமாக வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தூதரகம்
அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தூதரகம்

இந்த அதிரடி நிகழ்வுகளால் இஸ்ரேல், ஈராக், சிரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் பதற்றம் தொற்றியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்கு குந்தகம் விளைவித்துள்ள இந்தச் செயல் உலக அளவில் பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் தொற்றியுள்ள இந்தப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியுள்ளது.

2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஈரான் நாட்டின் ஆதர்ச நாயகனாக வலம்வந்தவர் சொலைமானி. அவரை கொலை செய்யும் விதமாக அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல், ஈரான் மீது நடைபெற்றுள்ள நேரடித் தாக்குதலாகக் கருதப்படுகிறது.

கோபத்தின் உச்சியில் ஈரான் அரசு
கோபத்தின் உச்சியில் ஈரான் அரசு

இதன்மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி நிலைகுலைந்து மூன்றாம் உலகப்போருக்கான முகாந்திரமாக மாறும் அபாயம் எழுந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கா அடுத்தாண்டு தேர்தலை சந்திக்கும் நிலையில், வாக்காளர்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்தும் யுக்தியில் ஈரான் பூதத்தை கிளப்பியுள்ளார் ட்ரம்ப். புத்தாண்டை அதகளமாக ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தை அதிரடி அதகளத்துடன் ஆரம்பித்து வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் அமெரிக்க தாக்குதல் படையினர் ஈராக்கில் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஈரானை சேர்ந்த ராணுவத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகனாகவும் வலம்வந்த குவாசிம் சொலைமானி பலியாகியுள்ளார்.

அமெரிக்க தாக்குதல் குறித்து ட்ரம்பின் ட்வீட்
அமெரிக்க தாக்குதல் குறித்து ட்ரம்பின் ட்வீட்

ஈரான் அமெரிக்காவுக்கு இடையே நீண்ட நாட்களாக நடைபெற்றுவந்த மோதல் போக்கு, தற்போது நேரடிப் போராக மாறும் அபாயத்தை இந்தத் தாக்குதல் உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்தச் செயலால், அமெரிக்கா ஈரான் மட்டுமல்லாமல், ஈராக், இஸ்ரேல், சிரியா, சவுதி அரேபியா என ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியமும் பதற்றநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள இந்தப் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிசமாக உயரும் அபாயம் உள்ளது. இதன் தாக்கம் தங்களின் பொருளாதாரத்தையும் எவ்வாறு பாதிக்கும் என அச்ச உணர்வில் ஈரான் - அமெரிக்காவின் நகர்வுகளை உலகநாடுகள் அனைத்தும் உற்றுநோக்கியுள்ளன.

ஈரான் - அமெரிக்கா மோதலின் பின்னணிக் கதை

ஈரான் - அமெரிக்காவுக்கிடையே நீண்ட நாட்களாகவோ மோதல் போக்கு நிலவிவருகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்காவுடன் நட்பு நாடாகவே ஈரான் இருந்துவந்தது. 1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற உள்நாட்டு புரட்சி அமெரிக்க ஆதரவு அரசை நீக்கி, அமெரிக்காவுக்கு எதிரான அரசாட்சியை நிறுவியது. அதன்பின்னர் ஈரான்-ஈராக் யுத்தம், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு, ஈரானின் அணு ஆயுத திட்டம் ஆகிய நிகழ்வுகளால் இரு நாட்டு உறவும் மோசமடைந்துவந்தது.

எண்ணெயும், அணு ஆயுதமும்தான் அமெரிக்கா - ஈரான் மோதல் போக்கின் மையப்புள்ளிகள். மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வளம் மிக்க இரு முக்கிய நாடுகள் ஈரான் மற்றும் சவுதி அரேபியா. இரு நாடுகளும் இஸ்லாமிய மதத்தின் இரு துருவங்களான சன்னி, ஷியா பிரிவுகளின் தலைமையிடங்களாக திகழ்ந்துவருகின்றன. மதக் கொள்கையால் முரண்பட்டுள்ள இரு நாடுகளும் தங்களின் எண்ணெய் வளங்களைக் கொண்டு பொருளாதார ரீதியாக மோதிக்கொள்கின்றன.

கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

அமெரிக்கா, தனது எதிரியான ஈரானைக் கட்டம் கட்ட சவுதி அரேபியாவுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகிறது. அமெரிக்காவின் அரசியல் எதிரியான ரஷ்யாவின் ஆதரவு ஈரானின் பக்கம். அத்துடன் ஈரானும் சவுதி அரேபியாவும் மோதிக்கொள்ளாமல், தனது அண்டை நாடுகளில் நீண்ட காலமாக மறைமுகமாக மோதலில் ஈடுபட்டுவருகின்றன. சிரியா, ஏமன், லிபியா, ஈராக் எனப் பல நாடுகளின் உள்நாட்டுப்போரை ஈரான் - சவுதி நாடுகள் தங்களின் யுத்தக் களங்களாக பயன்படுத்திவருகின்றன.

அமெரிக்கா - ஈரான் - சவுதி மோதல் போக்கால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதியும் பொருளாதாரமும் சீர்குலைந்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு ஒரு புதிய திருப்பத்தை சந்தித்தது.

ஈரானுடன் நல்லுறவை உருவாக்கும் நோக்கில், அன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டுடன் வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டார். ஈரான் மீது விதித்திருந்த பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்கிக்கொள்வதாகவும், பதிலுக்கு ஈரான் தனது அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் ஒப்பந்தம் முடிவாகியது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்யா, பிரான்ஸ், சீனா, பிரிட்டன் ஆகிய வல்லாதிக்கங்களும் உறுப்பு நாடுகளாகச் சேர்ந்துகொண்டன.

ஒப்பந்தத்துக்காக இணைந்த உலகநாடுகள்
ஒப்பந்தத்துக்காக இணைந்த உலகநாடுகள்

ட்ரம்பின் வருகையும் தலைகீழ் மாற்றமும்:

2017ஆம் ஆண்டு ஒபாமாவுக்குப்பின் ஆட்சிப் பொறுப்புக்குவந்த ட்ரம்ப், ஒபாமா செயல்படுத்திய பல்வேறு ஒப்பந்தங்கள் செல்லாது என திரும்பப்பெறத் தொடங்கினார். அமெரிக்காவும் ஈரானும் மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து வெளியேற ட்ரம்ப், ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அள்ளி வீசினார். இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என அழுத்தம் தந்தார்.

அமெரிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்
அமெரிக்க ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்

ட்ரம்பின் இந்தச் செயல்கள் ஈரான் பொருளாதாரத்தின் அடிமடியிலேயே கைவைக்கும் விதமாக மாறின. இதன் காரணமாக ஆத்திரமடைந்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடத் தொடங்கிய ஈரான், தனது அணு ஆயுத செயல்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்தியது. மேலும், கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு ஆத்திரமூட்டும் செயலை ஈராக் மண்ணில் ஈரான் மேற்கொண்டது.

உச்சம் தொட்ட மோதல்

ஈராக்கை படையெடுத்து சதாம் ஹுசைனின் ஆட்சியை நீக்கிய அமெரிக்கா, அங்கு புதிய அரசை நிறுவி அந்த அரசு செயல்பட பக்கபலமாக நின்று பயிற்சி அளித்துவருகிறது. ஈராக்கில் அமெரிக்க ஆதரவு அரசுக்கு எதிராக காதிப் ஹிஸ்போல்லா என்ற உள்நாட்டுக் கிளர்ச்சிப்படை செயல்பட்டுவருகிறது. இந்தக் கிளர்ச்சிப்படைக்கு ஆதரவாக ஈரானின் பாதுகாப்புப்படை செயல்படுகிறது. குறிப்பாக தற்போது உயிரிழ்ந்த ஈரானிய ராணுவத் தளபதி குவாசிம் சொலைமானி கதிப் ஹிஸ்போல்லா கிளர்ச்சிப்படைக்கு நேரடி உதவிகளை ஈராக்கிலிருந்து மேற்கொண்டார்.

ஈராக் கிளர்ச்சிப்படைத் தலைவர் அபு மஹ்தி அல் முஹ்தானிஸுடன் குவாசிம் சொலைமானி
ஈராக் கிளர்ச்சிப்படைத் தலைவர் அபு மஹ்தி அல் முஹ்தானிஸுடன் குவாசிம் சொலைமானி

இந்தக் கிளர்ச்சிப்படை சில நாட்களுக்கு முன்பு ஈராக் ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஹிஸ்போல்லா அமைப்பின் மீது பதில் தாக்குதல் நடத்தவே, கிளர்ச்சிப்படை வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஹிஸ்போல்லா கிளர்ச்சிப்படையினர், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்குள் புகுந்து சூறையாடினர்.

பொறுமையிழந்த டொனால்ட் ட்ரம்ப், கிளர்ச்சிப்படையினரும் அதன் தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் ஈரான் அரசும் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என எச்சரித்தார்.

அந்த எச்சரிக்கையை பிரகடனப்படுத்தும் விதமாக ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சொலைமானி, ஈராக் கிளர்ச்சிப்படைத் தலைவர் அபு மஹ்தி அல் முஹ்தானிஸ் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் ராணுவத் தளபதி சொலைமானி
ஈரான் ராணுவத் தளபதி சொலைமானி

அதிர்வலைகளில் உலகநாடுகள்:

ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் நிகழ்ந்துள்ள இந்த எதிர்பாராத தாக்குதல், ஈரானை உறையச் செய்துள்ளது. அமெரிக்கா ஈரானின் மீது பயங்கரவாதத்தை ஏவியுள்ளது. அந்நாட்டை சரியான விதத்தில் பழிவாங்குவோம் என ஈரான் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அமெரிக்கர்கள் ஈராக்கைவிட்டு அவசரமாக வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தூதரகம்
அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தூதரகம்

இந்த அதிரடி நிகழ்வுகளால் இஸ்ரேல், ஈராக், சிரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் பதற்றம் தொற்றியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதிக்கு குந்தகம் விளைவித்துள்ள இந்தச் செயல் உலக அளவில் பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் தொற்றியுள்ள இந்தப் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரத்தொடங்கியுள்ளது.

2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. ஈரான் நாட்டின் ஆதர்ச நாயகனாக வலம்வந்தவர் சொலைமானி. அவரை கொலை செய்யும் விதமாக அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல், ஈரான் மீது நடைபெற்றுள்ள நேரடித் தாக்குதலாகக் கருதப்படுகிறது.

கோபத்தின் உச்சியில் ஈரான் அரசு
கோபத்தின் உச்சியில் ஈரான் அரசு

இதன்மூலம் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி நிலைகுலைந்து மூன்றாம் உலகப்போருக்கான முகாந்திரமாக மாறும் அபாயம் எழுந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கா அடுத்தாண்டு தேர்தலை சந்திக்கும் நிலையில், வாக்காளர்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்தும் யுக்தியில் ஈரான் பூதத்தை கிளப்பியுள்ளார் ட்ரம்ப். புத்தாண்டை அதகளமாக ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.

Intro:Body:

Iran - US tension: US attack on qusem soleimani explained 


Conclusion:
Last Updated : Jan 3, 2020, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.