ETV Bharat / international

பள்ளிகளில் அடைக்கலம் புகுந்த 52,000 பாலஸ்தீனியர்கள் : ஐநா அறிக்கை

போர் சூழல் காரணமாக ஐநா மீட்புக் குழு, பாலஸ்தீனிய அகதிகள் மீட்புக் குழு நடத்தும் பள்ளிகளில் மட்டும் இதுவரை 52 ஆயிரம் பேர் அடைக்கலம் புகுந்துள்ளதாக ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

author img

By

Published : May 19, 2021, 4:50 PM IST

Palestine Refugees
Palestine Refugees

இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமான மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல் ராணுவமும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும் மாறிமாறி நடத்திய வான்வெளித் தாக்குதல் காரணமாக, இரு நாட்டு எல்லைப்பகுதியான காசாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது நாள்களில் மட்டும் 1,615 வான்வெளித் தாக்குதல் காசா மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 213 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், 448க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அடைக்கலம் தேடி காசா நகரை விட்டு வெளியேறியுள்ளனர். ஐநா மீட்புக் குழு, பாலஸ்தீனிய அகதிகள் மீட்புக் குழு நடத்தும் பள்ளிகளில் மட்டும் இதுவரை 52 ஆயிரம் பேர் அடைக்கலம் புகுந்துள்ளதாக ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இரு தரப்பும் மோதல் போக்கை கைவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தொடர் கோரிக்கையை முன்வைக்கின்றன.

இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா முடிவு!

இஸ்ரேல்- பாலஸ்தீன் இடையே கடந்த இரண்டு வாரங்களாக தீவிரமான மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல் ராணுவமும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கமும் மாறிமாறி நடத்திய வான்வெளித் தாக்குதல் காரணமாக, இரு நாட்டு எல்லைப்பகுதியான காசாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது நாள்களில் மட்டும் 1,615 வான்வெளித் தாக்குதல் காசா மீது நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 213 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், 448க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் அடைக்கலம் தேடி காசா நகரை விட்டு வெளியேறியுள்ளனர். ஐநா மீட்புக் குழு, பாலஸ்தீனிய அகதிகள் மீட்புக் குழு நடத்தும் பள்ளிகளில் மட்டும் இதுவரை 52 ஆயிரம் பேர் அடைக்கலம் புகுந்துள்ளதாக ஐநா சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இரு தரப்பும் மோதல் போக்கை கைவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு திரும்ப வேண்டும் என ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தொடர் கோரிக்கையை முன்வைக்கின்றன.

இதையும் படிங்க: இஸ்ரேலுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்கு ஆயுதங்கள் விற்க அமெரிக்கா முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.