ETV Bharat / international

அணுக்கரு பேரழிவிலிருந்து தப்பியதா ஐரோப்பா கண்டம்

author img

By

Published : Mar 5, 2022, 9:53 AM IST

Updated : Mar 5, 2022, 10:29 AM IST

ஒரு கண்டத்தின் மிகப்பெரிய அணுமின் நிலையம் தாக்கப்படும்போது, அங்குள்ள விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தப்பிக்க மட்டுமே எண்ணுவார்கள். இதனால் அணுமின் நிலையம் கண்காணிக்கப்படாமலும், கதிரியக்க அணுக்கள் கட்டுப்படுத்தப்படாமலும் போகலாம். இது மிகப்பெரிய அணுக்கரு பேரழிவை ஏற்படுத்தும்.

world-escapes-nuke-catastrophe-in-ukraine
world-escapes-nuke-catastrophe-in-ukraine

கீவ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் பிப். 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன. அந்த வகையில் நேற்று(மார்ச். 4) சபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு செய்திகளில், சபோரிஷியா அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்றில் தீப்பிடித்துள்ளது. இந்த உலையில் ஆயிரக்கணக்கான டன் அளவில் அணு எரிபொருள்கள், ரசாயனங்கள் உள்ளன.

இது ஐரோப்பா கண்டத்திற்கு மிகப்பெரிய கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலைய தாக்குதல் உலகலாவிய பீதியைத் தூண்டிவிட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களின் கண்டனங்களை பெற்றுவருகிறது. அண்மை தகவலாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ரஷ்ய கூட்டமைப்பு தெரிவிக்கையில், சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் நோக்கம் ரஷ்ய படைகளுக்கு கிடையாது. மார்ச் 4ஆம் தேதி ரஷ்ய படை வீரர்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கவே ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனிடையே அந்த நாசக்கார குழு அணுமின் நிலையத்தில் தீயைகொளுத்திவிட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. அணுமின் நிலையத்திலிருந்து எந்த விதமான கதிரியக்கமும் வெளியாகவில்லை. தற்போது அணுமின் நிலையம் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று வாதிட்டுள்ளது. இப்படி சபோரிஷியா அணுமின் நிலையம் தாக்கப்பட்டத்தில் விவகாரத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன.

இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை மிகுந்த கவலையில் உள்ளது. காரணம் என்னவென்றால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்போது, ஒரு கண்டத்தையே அழிக்கும் அணுகுண்டுக்கு தேவையான புளூட்டோனியம் உள்ள ஒரு அணுமின் நிலையம் தாக்கப்படும்போது அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியாளர்கள் தப்பியோட மட்டுமே எண்ணுவார்கள்.

இதனால் அணுமின் நிலையம் முற்றிலும் கண்காணிக்கப்படாமலும், புளுட்டோனியம் போன்ற கதிரியக்க அணுக்கள் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் விளைவாக பேரழிவு துண்டிவிடப்படும். இதனை தடுக்க அணுமின் நிலையம் சீராக இயங்கவோ அல்லது கட்டுப்பாடுகளுன் மூடப்படுவதையே உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

கதிரியக்கம் கசிந்தால் என்ன நடக்கும்

இதுகுறித்து தேசிய அணுக்கரு ஆற்றல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆதர்ஷ் சர்தானா கூறுகையில், ஒரு அணுக்கரு நிலையத்திற்குள் ஏவுகணைத் தாக்குதலே அல்லது குண்டு வெடிப்போ நடந்திருந்தால், கதிரியக்க அணுக்கள் கசிய அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக கதிரியக்க அணுக்கள் வெவ்வேறு தன்மை கொண்டவை. விரைவான தாக்கம் கொண்ட கதிரியக்க அணுக்கள் காற்றில் கலந்தால் அதன் பாதிப்புகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் மெதுவான தாக்கம் கொண்ட கதிரியக்க அணுக்கள் மாத கணக்கில், ஆண்டுகணக்கில் காலம் கடந்து பாதிப்பை வெளிப்படுத்தும். இவற்றில் மக்கள் பாதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், தோல்புற்று நோய் உள்ளிட்ட பக்க விளைவுகளால் உயிரிழக்க நேரிடும். நல்வாய்ப்பாக சபோரிஷியா அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை. வழக்கமான அளிவிலேயே உள்ளது என்று சர்வதேச அணுசக்தி முகமை உறுதிபடுத்தியுள்ளது. வரும் நாட்களில் யார் கட்டுப்பாட்டில் சபோரிஷியா அணுமின் நிலையம் இருந்தாலும் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்

கீவ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் பிப். 24ஆம் தேதி முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றன. அந்த வகையில் நேற்று(மார்ச். 4) சபோரிஷியாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு செய்திகளில், சபோரிஷியா அணுமின் நிலையத்தில் உள்ள ஆறு உலைகளில் ஒன்றில் தீப்பிடித்துள்ளது. இந்த உலையில் ஆயிரக்கணக்கான டன் அளவில் அணு எரிபொருள்கள், ரசாயனங்கள் உள்ளன.

இது ஐரோப்பா கண்டத்திற்கு மிகப்பெரிய கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலைய தாக்குதல் உலகலாவிய பீதியைத் தூண்டிவிட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களின் கண்டனங்களை பெற்றுவருகிறது. அண்மை தகவலாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ரஷ்ய கூட்டமைப்பு தெரிவிக்கையில், சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் நோக்கம் ரஷ்ய படைகளுக்கு கிடையாது. மார்ச் 4ஆம் தேதி ரஷ்ய படை வீரர்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

அதற்கு பதிலடி கொடுக்கவே ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதனிடையே அந்த நாசக்கார குழு அணுமின் நிலையத்தில் தீயைகொளுத்திவிட்டது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. அணுமின் நிலையத்திலிருந்து எந்த விதமான கதிரியக்கமும் வெளியாகவில்லை. தற்போது அணுமின் நிலையம் ரஷ்ய படையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று வாதிட்டுள்ளது. இப்படி சபோரிஷியா அணுமின் நிலையம் தாக்கப்பட்டத்தில் விவகாரத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம்சாட்டுகின்றன.

இதுகுறித்து சர்வதேச அணுசக்தி முகமை மிகுந்த கவலையில் உள்ளது. காரணம் என்னவென்றால் இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும்போது, ஒரு கண்டத்தையே அழிக்கும் அணுகுண்டுக்கு தேவையான புளூட்டோனியம் உள்ள ஒரு அணுமின் நிலையம் தாக்கப்படும்போது அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியாளர்கள் தப்பியோட மட்டுமே எண்ணுவார்கள்.

இதனால் அணுமின் நிலையம் முற்றிலும் கண்காணிக்கப்படாமலும், புளுட்டோனியம் போன்ற கதிரியக்க அணுக்கள் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் விளைவாக பேரழிவு துண்டிவிடப்படும். இதனை தடுக்க அணுமின் நிலையம் சீராக இயங்கவோ அல்லது கட்டுப்பாடுகளுன் மூடப்படுவதையே உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

கதிரியக்கம் கசிந்தால் என்ன நடக்கும்

இதுகுறித்து தேசிய அணுக்கரு ஆற்றல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆதர்ஷ் சர்தானா கூறுகையில், ஒரு அணுக்கரு நிலையத்திற்குள் ஏவுகணைத் தாக்குதலே அல்லது குண்டு வெடிப்போ நடந்திருந்தால், கதிரியக்க அணுக்கள் கசிய அதிக வாய்ப்புள்ளது. பொதுவாக கதிரியக்க அணுக்கள் வெவ்வேறு தன்மை கொண்டவை. விரைவான தாக்கம் கொண்ட கதிரியக்க அணுக்கள் காற்றில் கலந்தால் அதன் பாதிப்புகளை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் மெதுவான தாக்கம் கொண்ட கதிரியக்க அணுக்கள் மாத கணக்கில், ஆண்டுகணக்கில் காலம் கடந்து பாதிப்பை வெளிப்படுத்தும். இவற்றில் மக்கள் பாதிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், தோல்புற்று நோய் உள்ளிட்ட பக்க விளைவுகளால் உயிரிழக்க நேரிடும். நல்வாய்ப்பாக சபோரிஷியா அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு அளவு அதிகரிக்கவில்லை. வழக்கமான அளிவிலேயே உள்ளது என்று சர்வதேச அணுசக்தி முகமை உறுதிபடுத்தியுள்ளது. வரும் நாட்களில் யார் கட்டுப்பாட்டில் சபோரிஷியா அணுமின் நிலையம் இருந்தாலும் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல்

Last Updated : Mar 5, 2022, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.