ETV Bharat / international

2020 இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்க பெண் கவிஞர்

author img

By

Published : Oct 8, 2020, 4:37 PM IST

Updated : Oct 8, 2020, 5:04 PM IST

2020ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க பெண் கவிஞர் லுயிஸ் க்ளுக் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Literature prize
Nobel Literature prize

2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 5ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பெண் கவிஞர் லுயிஸ் க்ளுக் இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.

1943ஆம் ஆண்டு நியூ யார்க் நகரில் பிறந்த லூயிஸ் க்ளுக் யேல் பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியையாகப் பணிபுரிந்துள்ளார். 1968 Firstborn என்ற நூல் மூலம் இலக்கிய உலகிற்கு பரிச்சயமான இவர், அமெரிக்க இலக்கிய உலகின் முன்னணி கவிஞராக உருவெடுக்கத் தொடங்கினார். 1993ஆம் ஆண்டில் புலிட்சர் விருது, 2014ஆம் ஆண்டில் நேஷ்னல் புக் விருது என முன்னணி விருதுகளை இவர் வென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹான்ட்கே என்பவருக்கு வழங்கப்பட்டது. இதுவரை, இந்தியாவிலிருந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசை ரவீந்திரநாத் தாகூர் மட்டுமே வென்றுள்ளார்.

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டு இயற்பியல், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு தலா மூவருக்கும், வேதியல் துறைக்கான நோபல் பரிசு இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக். 09) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: 19 வகையான விதைகளை கொண்டு உருவாக்கிய மகாத்மா காந்தியின் உருவம்

2020ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் 5ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பெண் கவிஞர் லுயிஸ் க்ளுக் இந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.

1943ஆம் ஆண்டு நியூ யார்க் நகரில் பிறந்த லூயிஸ் க்ளுக் யேல் பல்கலைகழகத்தில் ஆங்கில பேராசிரியையாகப் பணிபுரிந்துள்ளார். 1968 Firstborn என்ற நூல் மூலம் இலக்கிய உலகிற்கு பரிச்சயமான இவர், அமெரிக்க இலக்கிய உலகின் முன்னணி கவிஞராக உருவெடுக்கத் தொடங்கினார். 1993ஆம் ஆண்டில் புலிட்சர் விருது, 2014ஆம் ஆண்டில் நேஷ்னல் புக் விருது என முன்னணி விருதுகளை இவர் வென்றுள்ளார்.

2019ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹான்ட்கே என்பவருக்கு வழங்கப்பட்டது. இதுவரை, இந்தியாவிலிருந்து இலக்கியத்திற்கான நோபல் பரிசை ரவீந்திரநாத் தாகூர் மட்டுமே வென்றுள்ளார்.

உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன.

2020ஆம் ஆண்டு இயற்பியல், மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு தலா மூவருக்கும், வேதியல் துறைக்கான நோபல் பரிசு இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக். 09) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: 19 வகையான விதைகளை கொண்டு உருவாக்கிய மகாத்மா காந்தியின் உருவம்

Last Updated : Oct 8, 2020, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.