ETV Bharat / international

வாஷிங்டனில் நடைபெறும் ஜி 7 கூட்டத்தில் ஜெர்மனி அதிபர் பங்கேற்க மாட்டார்

author img

By

Published : May 30, 2020, 8:49 PM IST

Updated : May 30, 2020, 9:16 PM IST

பெர்லின்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் விருப்பத்தின்படி வாஷிங்டனில் நடைபெறும் ஜி - 7 கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார்

Merkal
Merkal

கரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகள் முடங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தற்போது முழுமையாக முடங்கியுள்ளன. இதன்காரணமாக ஜி20, ஜி7 நாடுகளின் கூட்டம் உள்ளிட்ட முக்கிய அமைப்பின் கூட்டங்களும் நடைபெறவில்லை.

இந்நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து நிலை சீரடையும் சூழல் தெரிவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக, வரும் ஜூன் 10லிருந்து 12ஆம் தேதிவரை ஜி7 நாடுகளின் கூட்டத்தை அமெரிக்காவின் வாஷிங்டன் அருகில் உள்ள கேம்ப் டேவிட் என்ற இடத்தில் நடத்தவும், கூட்டத்தில் ஜி7 நாட்டின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார். கானொலி காட்சியாகவோ, நேரடியாகவோ எவ்வாறு இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்தான் கரோனாவின் எண்ணிக்கை உலகளில் அதிமாக உள்ள நிலையில் இந்த கூட்டம் ட்ரம்ப் எதிர்பார்ப்பதுபோல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கராச்சி விமான விபத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கரோனா பாதிப்பின் காரணமாக உலக நாடுகள் முடங்கியுள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தற்போது முழுமையாக முடங்கியுள்ளன. இதன்காரணமாக ஜி20, ஜி7 நாடுகளின் கூட்டம் உள்ளிட்ட முக்கிய அமைப்பின் கூட்டங்களும் நடைபெறவில்லை.

இந்நிலையில், தற்போது பாதிப்பு குறைந்து நிலை சீரடையும் சூழல் தெரிவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்காரணமாக, வரும் ஜூன் 10லிருந்து 12ஆம் தேதிவரை ஜி7 நாடுகளின் கூட்டத்தை அமெரிக்காவின் வாஷிங்டன் அருகில் உள்ள கேம்ப் டேவிட் என்ற இடத்தில் நடத்தவும், கூட்டத்தில் ஜி7 நாட்டின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார். கானொலி காட்சியாகவோ, நேரடியாகவோ எவ்வாறு இருந்தாலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்தான் கரோனாவின் எண்ணிக்கை உலகளில் அதிமாக உள்ள நிலையில் இந்த கூட்டம் ட்ரம்ப் எதிர்பார்ப்பதுபோல் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: கராச்சி விமான விபத்து வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Last Updated : May 30, 2020, 9:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.