இருபதாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் நடந்த முதலாம் உலகப்போரில் 10 லட்சத்துக்கும் அதிகமாக இந்திய வீரர்களே கலந்துகொண்டு ஜெர்மனி படைகளுக்கு எதிராக சண்டையிட்டனர்.
இதில், வீரமரணம் அடைந்த 74 ஆயிரத்து 187 இந்திய வீரர்களின் நினைவாக ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் விலெர்ஸ் கைய்லேன் இந்தியப் போர் நினைவிடம் (Villers Guislain Indian War mémorial) அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இவர்களை நினைவுகூரும் வகையில் இன்று இந்திய நினைவிடத்தில் இருநாட்டு உயர் அலுவலர்கள், ராணுவ அலுவலர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.