ETV Bharat / international

3.77 கோடி எண்ணிக்கையை கடந்த கரோனா பாதிப்பு; ஐரோப்பாவில் மீண்டும் தீவிரம்

author img

By

Published : Oct 12, 2020, 11:41 AM IST

உலகளவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 212 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

COVID-19 tracker
COVID-19 tracker

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 77 லட்சத்து 46 ஆயிரத்து 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்து 435ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 47 ஆயிரத்து 330ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 841 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 79 லட்சத்து 91 ஆயிரத்து 998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், ஐரோப்பாவில் பெருந்தொற்றின் இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக பிரிட்டன் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் தலைத்தூக்கி வருவதால், பப்புகள், உணவகங்கள் மீண்டும் மூடப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க: போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்ட அசர்பைஜான்

உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. இதுவரை உலகளவில் 3 கோடியே 77 லட்சத்து 46 ஆயிரத்து 51 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 81 ஆயிரத்து 435ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 47 ஆயிரத்து 330ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 841 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 79 லட்சத்து 91 ஆயிரத்து 998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 19 ஆயிரத்து 695 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் தீவிரத்தன்மை குறைந்துவரும் நிலையில், ஐரோப்பாவில் பெருந்தொற்றின் இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக பிரிட்டன் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு மீண்டும் தலைத்தூக்கி வருவதால், பப்புகள், உணவகங்கள் மீண்டும் மூடப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க: போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலில் ஈடுபட்ட அசர்பைஜான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.