ஜெர்மனியில் நடைபெற்ற முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அமெரிக்கா செனட் சபையின் மூத்த உறுப்பினர் லின்ட்சே கிராஹம், காஷ்மீர் விவகாரத்தை ஜனநாயக முறையில் தீர்ப்பதே சரி என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், இது பற்றிய கவலை உங்களுக்கு தேவையில்லை. அந்த பிரச்னையை ஜனநாயக நாடு ஒன்று தீர்க்கும். அது என்ன நாடு என்பதும் உங்களுக்கு தெரியும் என தெரிவித்தார். காஷ்மீர் பிரச்னையை தீர்க்க இந்தியாவே போதும் என்பதை ஜெய்சங்கர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஐக்கிய நாடுகள் சபை குறித்து பேசிய ஜெய்சங்கர், "கடந்த 20 ஆண்டுகளில் உலக பொருளாதாரம் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. இது அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தலில் தேசியவாதம் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. தேசியவாதத்தை சில நாடுகள் ஆக்கப்பூர்வமாக முன்வைக்கிறது. பாதுகாப்பற்ற தன்மையை சில நாடுகள் கட்டமைத்து தேசியவாதத்தை பயன்படுத்துகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நம்பகத்தன்மை குறைந்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை" என்றார்.
இதையும் படிங்க : அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல்