மூன்று மாதங்களுக்குப் பிறகான தன்னுடைய கடற்பயணத்தை முடித்துக் கொண்டு இத்தாலிய பயணிகள் கப்பலான கோஸ்டா டெலிசோஸா ஜெனோவா நகரத்தைக் கடந்த புதன்கிழமை வந்தடைந்துள்ளது.
பார்சிலோனா கடற்பகுதியில் 35 நாட்களுக்கும் மேலாக மனிதர்களின் தொடர்பற்று இக்கப்பல் பயணித்து வந்த நிலையில், தற்போது அந்நகரின் சுகாதார அலுவலர்களின் தீவிர சோதனைக்குப் பிறகு கரைசேர்ந்த கப்பலின் பயணிகள் ஒருவர் பின் ஒருவராக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிற பயணிகள் கப்பல்களைப்போல் அல்லாமல் இக்கப்பலில் பெருமளவில் நோய்த்தொற்று பரவியதால் தனிமைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் புதிதாக எவரும் பாதிக்கப்படாத நிலையில் இக்கப்பல் நகரை வந்தடைந்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தலை நீர்த்துப்போகச் செய்ய ட்ரம்ப் முயற்சி - பிடன் குற்றச்சாட்டு!