ETV Bharat / state

சேலம் விபத்து; லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு! - Salem Road Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சேலம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த சென்னன், அவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷ்ணு
விபத்தில் உயிரிழந்த சென்னன், அவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷ்ணு (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே அமைந்துள்ள திப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னன் (65). இவர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டு, தனது மகள் சுதா (38) மற்றும் 7ஆம் வகுப்பு பயிலும் அவரது பேரன் விஷ்ணு (12) ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மல்லூர் சென்றுள்ளார்.

மேலும், அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மல்லூர் பகுதியிலேயே நிறுத்தி விட்டு, பேருந்தில் திருச்சி செல்வதற்கு திட்டமிட்டு, தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனம் மூலம் கடக்க முயன்றதாகவும், அப்போது, நாமக்கல் நோக்கி பருப்பு லோடு ஏற்றிக்கொண்டுச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக, சாலையைக் கடக்க முயன்ற சென்னனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

மேலும், லாரி மோதியதும் இருசக்கர வாகனத்தில் பயணித்த சென்னன், அவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷ்ணு ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் கூடிய மக்கள், இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு வந்த மல்லூர் காவல் நிலைய போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பல்லவன் விரைவு ரயிலில் தீ விபத்து.. பயணிகள் பதறியடித்து ஓடும் காட்சி வைரல்!

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மல்லூர் காவல் நிலையத்தினர், விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த அதன் ஓட்டுநர் சுந்தரராஜன் என்பவரை கைது செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தந்தை, மகள் மற்றும் பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் திப்பம்பட்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சேலம்: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே அமைந்துள்ள திப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னன் (65). இவர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டு, தனது மகள் சுதா (38) மற்றும் 7ஆம் வகுப்பு பயிலும் அவரது பேரன் விஷ்ணு (12) ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மல்லூர் சென்றுள்ளார்.

மேலும், அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மல்லூர் பகுதியிலேயே நிறுத்தி விட்டு, பேருந்தில் திருச்சி செல்வதற்கு திட்டமிட்டு, தேசிய நெடுஞ்சாலையை இருசக்கர வாகனம் மூலம் கடக்க முயன்றதாகவும், அப்போது, நாமக்கல் நோக்கி பருப்பு லோடு ஏற்றிக்கொண்டுச் சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக, சாலையைக் கடக்க முயன்ற சென்னனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

மேலும், லாரி மோதியதும் இருசக்கர வாகனத்தில் பயணித்த சென்னன், அவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷ்ணு ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதியில் கூடிய மக்கள், இந்த விபத்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு வந்த மல்லூர் காவல் நிலைய போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: பல்லவன் விரைவு ரயிலில் தீ விபத்து.. பயணிகள் பதறியடித்து ஓடும் காட்சி வைரல்!

அதனைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த மல்லூர் காவல் நிலையத்தினர், விபத்து ஏற்படுத்திய லாரியை ஓட்டி வந்த அதன் ஓட்டுநர் சுந்தரராஜன் என்பவரை கைது செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தந்தை, மகள் மற்றும் பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் திப்பம்பட்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.