ETV Bharat / international

இலங்கை அதிபர் தேர்தல்: தோல்வியை ஒப்புக்கொண்ட சஜித் பிரேமதாச

author img

By

Published : Nov 17, 2019, 12:22 PM IST

கொழும்பு: இலங்கையில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு, என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனக் கூறி சஜித் பிரேமதாச ட்விட்டரில் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

sri lanka


இலங்கையில் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவுற்றது.

இதில், பொதுஜன பெரமுனா கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சவும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவும் முன்னிலை வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

இவர்களைத் தவிர, 35 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இத்தனைப் வேட்பாளர்கள் களமிறங்கியது இதுவே முதன்முறையாகும்.

சுஜித் பிரேமதாச ட்வீட், Sujith Premadasa tweet
சஜித் பிரேமதாச ட்வீட்

வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் நேற்று மாலை முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், கோத்தபய ராஜபக்ச 52.87 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 39.67 விழுக்காடு வாக்குகள் பெற்று சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், "அதிபர் தேர்தலில் வெற்றி முகப்பில் உள்ள கோத்தபய ராஜபக்சவிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்கிறேன்." என சஜித் பிரேமதாச தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இலங்கையில் 8ஆவது அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவுற்றது.

இதில், பொதுஜன பெரமுனா கட்சி சார்பாக முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்சவும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாசவும் முன்னிலை வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

இவர்களைத் தவிர, 35 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இத்தனைப் வேட்பாளர்கள் களமிறங்கியது இதுவே முதன்முறையாகும்.

சுஜித் பிரேமதாச ட்வீட், Sujith Premadasa tweet
சஜித் பிரேமதாச ட்வீட்

வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் நேற்று மாலை முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், கோத்தபய ராஜபக்ச 52.87 விழுக்காடு வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 39.67 விழுக்காடு வாக்குகள் பெற்று சஜித் பிரேமதாச இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இந்நிலையில், "அதிபர் தேர்தலில் வெற்றி முகப்பில் உள்ள கோத்தபய ராஜபக்சவிற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களின் தீர்ப்பை தான் ஏற்றுக்கொள்கிறேன்." என சஜித் பிரேமதாச தன் தோல்வியை ஒப்புக்கொண்டு ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Intro:Body:

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவைப் பாராட்டுகிறேன்- சஜித் பிரேமதாச #SriLanka #SrilankaPresidentElection #PresidentialElection2019



இலங்கை அதிபர் தேர்தல்: 4,42,185 வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை *கோத்தபய ராஜபக்சே 35,40,023 வாக்குகளும், சஜித் பிரேமதாச 30,97,838 வாக்குகளும் பெற்றுள்ளனர்..இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிக்கு தேவையான 50% வாக்குகளை எட்டினார் கோத்தபய ராஜபக்ச!


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.