ETV Bharat / international

கரோனாவால் 10 நாள்களில் ஒருவர்கூட இந்த நாட்டில் உயிரிழக்கவில்லையாம்!

பெய்ஜிங்: கோவிட்19 தொற்று காரணமாகக் கடந்த 10 நாள்களில் சீனாவில் ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை என்றாலும் வெளிநாட்டிலிருந்து சீனா வருபவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

author img

By

Published : Apr 26, 2020, 12:25 PM IST

China
China

சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று பரவியது. தொடக்கத்தில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக நிலவியது. இருப்பினும் பின்னர் சீனா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பரவல் கட்டுக்குள்வந்தது. இதற்கு உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து சீனா வருபவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது குறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனிக்கிழமை புதிதாக 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்; ஆறு பேருக்கு சமூகத் தொற்றாக வைரஸ் பரவியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் ரஷ்யா எல்லையிலுள்ள ஹைலோங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொருவர் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு ஆனால் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கும் asymptomatic case-களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அந்நாட்டில் புதிதாக 30 பேருக்கு இப்படி வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருவோர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்படுவது அதிகரித்துவருவதால் சீனாவில் வைரஸ் பரவல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதைக் கட்டுப்படுத்துவது கடினமான பணியாக இருக்கும் என்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மி ஃபெங் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் கடந்த 10 நாள்களில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சீனாவைத் தொடர்ந்து தரவுகளை மாற்றும் அமெரிக்கா!

சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கோவிட்-19 தொற்று பரவியது. தொடக்கத்தில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுப் பரவலாக நிலவியது. இருப்பினும் பின்னர் சீனா எடுத்த நடவடிக்கைகள் காரணமாக வைரஸ் பரவல் கட்டுக்குள்வந்தது. இதற்கு உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து சீனா வருபவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது குறித்து அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சனிக்கிழமை புதிதாக 11 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்; ஆறு பேருக்கு சமூகத் தொற்றாக வைரஸ் பரவியுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

உள்நாட்டில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் ரஷ்யா எல்லையிலுள்ள ஹைலோங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொருவர் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு ஆனால் எந்தவொரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கும் asymptomatic case-களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அந்நாட்டில் புதிதாக 30 பேருக்கு இப்படி வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருவோர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்படுவது அதிகரித்துவருவதால் சீனாவில் வைரஸ் பரவல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதைக் கட்டுப்படுத்துவது கடினமான பணியாக இருக்கும் என்றும் தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மி ஃபெங் தெரிவித்தார்.

மேலும், சீனாவில் கடந்த 10 நாள்களில் எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சீனாவைத் தொடர்ந்து தரவுகளை மாற்றும் அமெரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.