ETV Bharat / international

நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை எடுக்கவுள்ள நேபாள உச்ச நீதிமன்றம்!

author img

By

Published : Jan 7, 2021, 3:19 PM IST

காத்மாண்டு: நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 13 மனுக்கள் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை எடுக்கவுள்ள நேபாள உச்ச நீதிமன்றம்!
நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை எடுக்கவுள்ள நேபாள உச்ச நீதிமன்றம்!

கடந்த டிசம்பர் 20ஆம் தேதி, நாடாளுமன்றத்தை (பிரதிநிதிகள் அவை) கலைக்க வேண்டும் என நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதை அடுத்து குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30, மே 10 ஆகிய இரு தேதிகளில் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தல் நடத்தப்படுமென பிரதமர் கட்க பிரசாத் ஷர்மா ஒலி அறிவித்தார்.

இதன்மூலம் வழக்கமாகத் தேர்தல் நடைபெற வேண்டிய நேரத்தைக் காட்டிலும் இரண்டு ஆண்டுகள் முன்னரே தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், பிரதமருமான கட்க பிரசாத் ஷர்மா ஒலி தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பைச் சந்தித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்தும் அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து 7 அமைச்சர்கள் பதவி விலகியது கவனிக்கத்தக்கது.

நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை எடுக்கவுள்ள நேபாள உச்ச நீதிமன்றம்!
நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை எடுக்கவுள்ள நேபாள உச்ச நீதிமன்றம்!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவரும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா புஷ்ப கமல் தஹாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சோலேந்திர ஷம்ஷர் ராணா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன்பாக விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு ஏற்ப இருந்ததா, இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று நேபாள செய்தி நிறுவனமான கபார்ஹப் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், “இது நேபாளத்தின் உள்விவகாரம். இது ஜனநாயக ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கிறது.

இதையும் படிங்க : கரோனா அச்சுறுத்தல்: இங்கிலாந்தில் தூதரக சேவையை நிறுத்தி வைத்த இந்தியா!

கடந்த டிசம்பர் 20ஆம் தேதி, நாடாளுமன்றத்தை (பிரதிநிதிகள் அவை) கலைக்க வேண்டும் என நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவை கோரியதை அடுத்து குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30, மே 10 ஆகிய இரு தேதிகளில் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தல் நடத்தப்படுமென பிரதமர் கட்க பிரசாத் ஷர்மா ஒலி அறிவித்தார்.

இதன்மூலம் வழக்கமாகத் தேர்தல் நடைபெற வேண்டிய நேரத்தைக் காட்டிலும் இரண்டு ஆண்டுகள் முன்னரே தேர்தலை நடத்த அவர் திட்டமிட்டிருந்தது அம்பலமானது.

ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், பிரதமருமான கட்க பிரசாத் ஷர்மா ஒலி தனது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பைச் சந்தித்துவருகிறார் என்று கூறப்படுகிறது. கட்சியையும், ஆட்சியையும் ஒருதலைபட்சமாக நடத்தும் அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்து 7 அமைச்சர்கள் பதவி விலகியது கவனிக்கத்தக்கது.

நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை எடுக்கவுள்ள நேபாள உச்ச நீதிமன்றம்!
நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீது விசாரணை எடுக்கவுள்ள நேபாள உச்ச நீதிமன்றம்!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து நேபாள உச்ச நீதிமன்றத்தில் 13 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒருங்கிணைந்த நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவரும், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான பிரசாண்டா புஷ்ப கமல் தஹாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சோலேந்திர ஷம்ஷர் ராணா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன்பாக விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கு ஏற்ப இருந்ததா, இல்லையா என்பது குறித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று நேபாள செய்தி நிறுவனமான கபார்ஹப் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், “இது நேபாளத்தின் உள்விவகாரம். இது ஜனநாயக ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும்” எனக் கூறியிருக்கிறது.

இதையும் படிங்க : கரோனா அச்சுறுத்தல்: இங்கிலாந்தில் தூதரக சேவையை நிறுத்தி வைத்த இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.