ETV Bharat / international

இந்தியா-ஜப்பான் உறவின் நம்பிக்கைத் தூணாகத் திகழ்ந்த ஷின்சோ அபே

author img

By

Published : Aug 30, 2020, 12:18 AM IST

Updated : Aug 30, 2020, 11:18 AM IST

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த இந்தியா, வடகிழக்குப் பகுதிகளில் ஜப்பானிய திட்டங்களுக்கு அனுமதி அளித்தது. இதனை நமது மூத்த செய்தியாளர் அரோனிம் பூயானிடம் பேட்டியளித்த வெளியுறவுத் துறை தூதராக இருந்த ராஜீவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.

japan
japan

தனது வடகிழக்குப் பிராந்தியங்களில் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிட இந்தியா ஒருபோதும் அனுமதித்ததில்லை. அதேவேளை, அண்மையில் ராஜினாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த இந்தியா, வடகிழக்குப் பகுதிகளில் ஜப்பானிய திட்டங்களுக்கு அனுமதி அளித்தது.

இது குறித்து வெளியுறவுத்துறை தூதராக இருந்த ராஜீவ் பாட்டியா நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "வடகிழக்கு விவகாரங்களில் எப்போதும் எச்சரிக்கை உணர்வோடு இருக்கும் இந்தியா, அப்பகுதியில் ஜப்பான் நாட்டுத் திட்டங்களுக்கு அனுமதியளித்தது. இது பிரதமர் அபே மீது இந்திய வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு.

வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சியில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா கிழக்காசிய நாடுகள் நோக்கிய கொள்கையில் தீவிரம் காட்டத் தொடங்கியது. இருநாட்டு உறவை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஜப்பானின் கிழக்கு கடற்கரைத் தொடங்கி ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை, இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளது. 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் (ASEAN) நாடுகளின் உறுப்பினரான இந்தியாவும் ஜப்பானும் அமைதி, வளர்ச்சிக்குப் பங்குவகிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளன.

2018ஆம் ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டு, பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் உறுதியுடன் செயல்பட முடிவெடுத்தனர். இதன் பகுதியாகவே, கிழக்காசிய கொள்கையை தீவிரப்படுத்திய இந்தியா, பல்வேறு திட்டங்களை ஜப்பானுடன் மேற்கொண்டது. ஜப்பானுடன் வரலாற்றுப் பாரம்பரிய தொடர்புகொண்டுள்ள வடகிழக்குப் பகுதிகளிலும் இந்த வளர்ச்சித் திட்டங்கள் கையெழுத்திடப்பட்டன.

2012-20 ஆண்டு காலகட்டம் இந்தியா-ஜப்பான் இடையே பொற்காலமாகக் கருதப்படுகிறது. இதன் முக்கிய அம்சமாகத் திகழ்வது மோடி-ஷின்சோ அபே இடையிலான நட்புறவு ஆகும். 2014ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற மோடி, அங்கு இருநாட்டு உறவுக்கு மூன்று முக்கிய அம்சங்களை மையப்பொருளாக முன்வைத்தார்.

அவை இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவு, வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி மீது சிறப்பு கவனம் ஆகியவையாகும். இதன் காரணமாகவே, வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சி, பண்பாடு, கல்வித் திட்டங்களில் ஜப்பான் முக்கியப் பங்களிப்பை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

வடகிழக்குப் பிராந்தியம்-ஜப்பான் உறவின் முக்கிய ஆண்டாக 2017 அமைந்தது. வடகிழக்குப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், வளர்ச்சிக் கட்டமைப்பு, தொழிற்துறை கட்டமைப்பு, சுற்றுலா, பண்பாடு, விளையாட்டு தொடர்பான நடவடிக்கை ஆகியவை 2017ஆம் ஆண்டு முதல் அதிகப்படுத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங்குடன், ஜப்பான் தூதர்கள் சந்திப்பை மேற்கொண்டனர். அப்போது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

கவுஹாத்தி குடிநீர்த் திட்டம், கவுஹாத்தி வடிகால் திட்டம், வடகிழக்குச் சாலை மேம்பாட்டுத் திட்டம், சிக்கிம் வன மேம்பாட்டுத் திட்டம், திரிபுரா வன மேம்பாட்டுத் திட்டம், மிசோரம் வேளாண் மற்றும் பாசன மேம்பாட்டுத் திட்டம், நாகலாந்து வன மேம்பாட்டுத் திட்டம் என வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஜப்பான் மேற்கொள்ள உள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இரு நாடுகளும் சரக்கு போக்குவரத்து சேவைகளை எளிமையாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றன. அத்துடன் ஜப்பானின், JICA அமைப்பு, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பாலத்திற்கு (19.3 கி.மீ.) சுமார் ஆயிரத்து 570 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இந்தியா, ஜப்பானுடன் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து புதிய கூட்டணி அமைக்கவுள்ளது. அதன்மூலம் அமைதி, வளர்ச்சியை உறுதிப்படுத்தவுள்ள இரு நாடுகளும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

ஷின்சோ அபே இந்திய-ஜப்பான் கூட்டுறவின் பெரும் சின்னமாக என்றும் நினைவுகூரப்படுவார்" என பாட்டியா கூறினார்.

தனது வடகிழக்குப் பிராந்தியங்களில் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையிட இந்தியா ஒருபோதும் அனுமதித்ததில்லை. அதேவேளை, அண்மையில் ராஜினாமா செய்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த இந்தியா, வடகிழக்குப் பகுதிகளில் ஜப்பானிய திட்டங்களுக்கு அனுமதி அளித்தது.

இது குறித்து வெளியுறவுத்துறை தூதராக இருந்த ராஜீவ் பாட்டியா நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "வடகிழக்கு விவகாரங்களில் எப்போதும் எச்சரிக்கை உணர்வோடு இருக்கும் இந்தியா, அப்பகுதியில் ஜப்பான் நாட்டுத் திட்டங்களுக்கு அனுமதியளித்தது. இது பிரதமர் அபே மீது இந்திய வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு.

வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சியில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா கிழக்காசிய நாடுகள் நோக்கிய கொள்கையில் தீவிரம் காட்டத் தொடங்கியது. இருநாட்டு உறவை மேம்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இதில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஜப்பானின் கிழக்கு கடற்கரைத் தொடங்கி ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை வரை, இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளது. 10 நாடுகளை உள்ளடக்கிய ஆசியான் (ASEAN) நாடுகளின் உறுப்பினரான இந்தியாவும் ஜப்பானும் அமைதி, வளர்ச்சிக்குப் பங்குவகிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளன.

2018ஆம் ஆண்டு இந்தியா-ஜப்பான் உச்சி மாநாட்டில் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டு, பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் உறுதியுடன் செயல்பட முடிவெடுத்தனர். இதன் பகுதியாகவே, கிழக்காசிய கொள்கையை தீவிரப்படுத்திய இந்தியா, பல்வேறு திட்டங்களை ஜப்பானுடன் மேற்கொண்டது. ஜப்பானுடன் வரலாற்றுப் பாரம்பரிய தொடர்புகொண்டுள்ள வடகிழக்குப் பகுதிகளிலும் இந்த வளர்ச்சித் திட்டங்கள் கையெழுத்திடப்பட்டன.

2012-20 ஆண்டு காலகட்டம் இந்தியா-ஜப்பான் இடையே பொற்காலமாகக் கருதப்படுகிறது. இதன் முக்கிய அம்சமாகத் திகழ்வது மோடி-ஷின்சோ அபே இடையிலான நட்புறவு ஆகும். 2014ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற மோடி, அங்கு இருநாட்டு உறவுக்கு மூன்று முக்கிய அம்சங்களை மையப்பொருளாக முன்வைத்தார்.

அவை இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவு, வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி மீது சிறப்பு கவனம் ஆகியவையாகும். இதன் காரணமாகவே, வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சி, பண்பாடு, கல்வித் திட்டங்களில் ஜப்பான் முக்கியப் பங்களிப்பை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

வடகிழக்குப் பிராந்தியம்-ஜப்பான் உறவின் முக்கிய ஆண்டாக 2017 அமைந்தது. வடகிழக்குப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல், வளர்ச்சிக் கட்டமைப்பு, தொழிற்துறை கட்டமைப்பு, சுற்றுலா, பண்பாடு, விளையாட்டு தொடர்பான நடவடிக்கை ஆகியவை 2017ஆம் ஆண்டு முதல் அதிகப்படுத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங்குடன், ஜப்பான் தூதர்கள் சந்திப்பை மேற்கொண்டனர். அப்போது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

கவுஹாத்தி குடிநீர்த் திட்டம், கவுஹாத்தி வடிகால் திட்டம், வடகிழக்குச் சாலை மேம்பாட்டுத் திட்டம், சிக்கிம் வன மேம்பாட்டுத் திட்டம், திரிபுரா வன மேம்பாட்டுத் திட்டம், மிசோரம் வேளாண் மற்றும் பாசன மேம்பாட்டுத் திட்டம், நாகலாந்து வன மேம்பாட்டுத் திட்டம் என வடகிழக்குப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஜப்பான் மேற்கொள்ள உள்ளது.

உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இரு நாடுகளும் சரக்கு போக்குவரத்து சேவைகளை எளிமையாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுவருகின்றன. அத்துடன் ஜப்பானின், JICA அமைப்பு, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்படவுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பாலத்திற்கு (19.3 கி.மீ.) சுமார் ஆயிரத்து 570 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இந்தியா, ஜப்பானுடன் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து புதிய கூட்டணி அமைக்கவுள்ளது. அதன்மூலம் அமைதி, வளர்ச்சியை உறுதிப்படுத்தவுள்ள இரு நாடுகளும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.

ஷின்சோ அபே இந்திய-ஜப்பான் கூட்டுறவின் பெரும் சின்னமாக என்றும் நினைவுகூரப்படுவார்" என பாட்டியா கூறினார்.

Last Updated : Aug 30, 2020, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.