ETV Bharat / international

கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் நீடிக்குமா?

author img

By

Published : May 20, 2020, 7:57 PM IST

அறிவியலாளர்கள் பலர் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கப் போராடி வரும் நிலையில், இந்த ஆண்டு ஊரடங்கால் நான்கு முதல் ஏழு விழுக்காடு வரை, கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் குறையும் என்று கணித்துள்ளனர்.

ஊரடங்கு
ஊரடங்கு

கரோனா ஊரடங்கால் சாலை, கடல், வான்வெளிப் போக்குவரத்து, தொழில் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைந்துள்ள காரணத்தால், கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் பில்லியன் டன்களுக்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் 17 விழுக்காடு வரை, கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இன்னும் சில நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

ஏற்கெனவே அறிவியலாளர்கள் பலர் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கப் போராடி வரும் நிலையில், இந்த ஆண்டு ஊரடங்கால் நான்கு முதல் ஏழு விழுக்காடு வரை கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் குறையும் என்று கணித்துள்ளனர்.

ஆனால், எந்த அளவுக்கு மக்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்களோ, அதைப் பொறுத்து இந்த அளவீடு மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உலகளாவிய கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு 1.5 விழுக்காடு குறைந்து, 2010ஆம் ஆண்டில் மீண்டும் 5 விழுக்காடு அளவு அதிகரித்தது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உலகத் தலைவர்கள் பலரும் கார்பன்-டை- ஆக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையில், பசுமை முதலீடுகளை அதிகரிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தற்போது கருத்துத் தெரிவித்துள்ள அறிவியலாளர்கள், காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, அடிப்படைக் கட்டமைப்பிலிருந்தே மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், இந்த கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சாதகமாக்கிக் கொண்டு, பசுமை முதலீடுகளை ஈர்த்து தக்கவைக்க, அனைத்து நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சீனாவில் தற்போது கரோனா நிலை என்ன?

கரோனா ஊரடங்கால் சாலை, கடல், வான்வெளிப் போக்குவரத்து, தொழில் துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைந்துள்ள காரணத்தால், கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் பில்லியன் டன்களுக்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் 17 விழுக்காடு வரை, கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இன்னும் சில நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

ஏற்கெனவே அறிவியலாளர்கள் பலர் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, கார்பன்-டை-ஆக்ஸைடால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கப் போராடி வரும் நிலையில், இந்த ஆண்டு ஊரடங்கால் நான்கு முதல் ஏழு விழுக்காடு வரை கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றம் குறையும் என்று கணித்துள்ளனர்.

ஆனால், எந்த அளவுக்கு மக்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகிறார்களோ, அதைப் பொறுத்து இந்த அளவீடு மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் உலகளாவிய கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு 1.5 விழுக்காடு குறைந்து, 2010ஆம் ஆண்டில் மீண்டும் 5 விழுக்காடு அளவு அதிகரித்தது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், உலகத் தலைவர்கள் பலரும் கார்பன்-டை- ஆக்ஸைடு வெளியேற்றத்தைத் தடுக்கும் வகையில், பசுமை முதலீடுகளை அதிகரிக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தற்போது கருத்துத் தெரிவித்துள்ள அறிவியலாளர்கள், காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர, அடிப்படைக் கட்டமைப்பிலிருந்தே மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், இந்த கரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சாதகமாக்கிக் கொண்டு, பசுமை முதலீடுகளை ஈர்த்து தக்கவைக்க, அனைத்து நாடுகளும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சீனாவில் தற்போது கரோனா நிலை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.