உலக நாடுகளை மிரட்டும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பல முன்னணி நாடுகளே திணறி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ளன.
இதுவரை உலக அளவில் நான்கு கோடியே இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 80 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 18 ஆயிரத்து 326ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 228ஆக உயர்ந்துள்ளது.
![கரோனா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9228924_ukhjk.jpg)
நேற்று (அக்.18) ஒரே நாளில் மட்டும் மூன்று லட்சத்து 21 ஆயிரத்து 429 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில் தான் 55 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.