ETV Bharat / international

ஐந்தே நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை - துரித செயல்பாடுகளில் சீன அரசு!

சீனாவில் பரவிவரும் கோவிட்-19 தொற்றினைக் கட்டுப்படுத்த அரசு, ஹெபெய் மாநிலத்தில் ஐந்தே நாட்களில் ஒரு பிரமாண்ட மருத்துவமனையை கட்டி முடித்து சாதனை படைத்துள்ளது.

author img

By

Published : Jan 16, 2021, 3:42 PM IST

China builds hospital in 5 days, surge in virus cases in China, coronavirus cases in China, ஐந்தே நாளில் கட்டப்பட்ட மருத்துவமனை, சீனா மருத்துவமனை, சீன அரசு, சீனா கொரோனா, சீனா கொரோனா மருத்துவமனை, ஐந்து நாள் மருத்துவமனை, சீனாவில் கரோனா, சீனாவில் கொரோனா, நாங்கோங் நகர் சீனா, ஹெபெய் மாநிலம் சீனா, Nangong city china, Hebei state china, china hospital, 5 days builded hospital, 5 days constructed hospital
ஐந்தே நாளில் கட்டப்பட்ட சீன மருத்துவமனை

பீய்ஜிங் (சீனா): கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஐந்து நாட்களில் சீன அரசு மருத்துவமனையை கட்டியுள்ளது.

ஹெபெய்(Hebei) மாநிலத்தில் இந்த புதிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 1,500 அறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. சீன அரசு இதுபோன்று மேலும் ஐந்து மருத்துவமனைகளை கட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது எஞ்சிய அந்த 5 மருத்துவமனைகள் அடுத்த வாரத்துக்குள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் கட்டி முடிக்கப்பட்டால் மொத்தம் 6,500 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்க முடியும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

சீன அரசு கோவிட்-19 தொற்றை பெருமளவு கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் சமீபத்தில் நாங்கோங் (Nangong) நகரிலும், ஹெபெய் மாநிலத்திலும் கிருமி தொற்று அதிகரித்து வருகின்றது. பலர் தொடர்ந்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அரசு இந்த முடிவை எடுத்து, துரிதமாக மருத்துவமனைகளை அமைத்து வருகிறது.

பீய்ஜிங் (சீனா): கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க ஐந்து நாட்களில் சீன அரசு மருத்துவமனையை கட்டியுள்ளது.

ஹெபெய்(Hebei) மாநிலத்தில் இந்த புதிய மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 1,500 அறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது. சீன அரசு இதுபோன்று மேலும் ஐந்து மருத்துவமனைகளை கட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது எஞ்சிய அந்த 5 மருத்துவமனைகள் அடுத்த வாரத்துக்குள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் கட்டி முடிக்கப்பட்டால் மொத்தம் 6,500 நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சையளிக்க முடியும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

சீன அரசு கோவிட்-19 தொற்றை பெருமளவு கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் சமீபத்தில் நாங்கோங் (Nangong) நகரிலும், ஹெபெய் மாநிலத்திலும் கிருமி தொற்று அதிகரித்து வருகின்றது. பலர் தொடர்ந்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டதால் அரசு இந்த முடிவை எடுத்து, துரிதமாக மருத்துவமனைகளை அமைத்து வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.