ETV Bharat / international

எல்லைப் பிரச்னை : முழுமையான விசாரணை நடத்த சீனா கோரிக்கை

author img

By

Published : Aug 14, 2020, 2:07 PM IST

பெய்ஜிங் : எல்லைப் பிரச்னைக்கு காரணமான ராணுவ வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என சீனா இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனா
சீனா

கடந்த மே 5ஆம் தேதி இந்திய - சீன எல்லையான கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியதை அடுத்து, இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களிடையே ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீன ராணுவம் தனது படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது.

ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளும் மோதிக் கொண்டன. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், சீனத் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது, கல்வான் மோதலுக்கு காரணமான படை வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உறுதி அளிக்குமாறும் சீனா வலியுறுத்தியுள்ளது. ”சீனா தான் எல்லைப் பிரச்னைக்கு காரணம்” என இந்தியா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இந்தியா, சீனா இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி, வடக்கில் லடாக்கிலிருந்து வடகிழக்கில் சிக்கிம் மாநிலம் வரை 3,500 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கடந்த மே 5ஆம் தேதி இந்திய - சீன எல்லையான கிழக்கு லடாக்கிலுள்ள பாங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவியதை அடுத்து, இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்களிடையே ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து சீன ராணுவம் தனது படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது.

ஆனால், யாரும் எதிர்பாராவிதமாக ஜூன் 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளும் மோதிக் கொண்டன. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட நிலையில், சீனத் தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் தற்போது, கல்வான் மோதலுக்கு காரணமான படை வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும் என இந்தியாவிடம் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க உறுதி அளிக்குமாறும் சீனா வலியுறுத்தியுள்ளது. ”சீனா தான் எல்லைப் பிரச்னைக்கு காரணம்” என இந்தியா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இந்தியா, சீனா இடையேயான சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதி, வடக்கில் லடாக்கிலிருந்து வடகிழக்கில் சிக்கிம் மாநிலம் வரை 3,500 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.