அந்தமான் நிகோபார் தீவுகள் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக கருதப்படுகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை தொடந்து ஒன்பது முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 4.7 முதல் 5.2 வரை ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கத்தால், பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.
காலை 5.14 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 என பதிவான நிலநடுக்கத்தால் கட்டங்கள் அதிர்ந்தன. இறுதியாக காலை 6.54 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிற்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த நிலநடுக்கங்களால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.