மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் அந்நாட்டுடன் இணைந்து தாங்கள் (அமெரிக்கா) கடுமையாக உழைத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக விதமாக பேசிய அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்கலா, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடக்கும் வர்த்தகம் 2018ஆம் ஆண்டு 142 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டினார். இது வரும் 2025ஆம் ஆண்டிற்குள் 238 டாலர்களாக உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.