ETV Bharat / international

மூன்று கட்டங்களாக லாக் டவுன் திறக்கப்படும் - அமெரிக்கா திட்டம்

நியூயார்க்: அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததும் லாக் டவுனை மூன்று கட்டங்களாக திறக்கும் செயல்வரைவை அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Apr 17, 2020, 3:30 PM IST

Trump
Trump

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 6.78 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 34 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலைத் தடுக்க அங்கு லாக் டவுன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் கடும் முடக்கத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் அங்கு நோய் தொற்றை குறைத்து மூன்று கட்டங்களாக லாக் டவுன் விதிகளை தளர்த்தும் வரைவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, முதல்கட்டமாக அங்கு நோய் பாதிப்பில்லாதவர்கள் தக்க முன்னெடுப்புகள், சமூக இடைவெளியுடன் இயங்க வழிவகை செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு விரைந்து குணமாக்கப்படுவார்கள் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின், அடுத்த 14 நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நோய் தாக்கத்திலிருந்து முற்றிலும் வெளியேற்றப்படுவார்கள். அதன் பின் அவர்கள் இயல்பு நிலையில் சமூகத்தில் இயங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இறுதியாக நிலைமை வெகுவாக மேம்பட்டு நோய் பாதிக்கப்பட்ட ஒரு சில நபர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பும் முடிவு எடுக்கப்படும்.

மேற்கண்ட மூன்ற கட்ட நடவடிக்கைகளை அந்தந்த மாநில ஆளுநர்கள் தங்களின் சூழலுக்கேற்ப முடிவெடுத்துக்கொள்ளலாம் என அதிபர் ட்ரம்ப் அனுமதித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவைத் தடுக்க நைஜீரியாவில் நடக்கும் கொடூரம்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 6.78 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 34 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலைத் தடுக்க அங்கு லாக் டவுன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் பொருளாதாரம் கடும் முடக்கத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் அங்கு நோய் தொற்றை குறைத்து மூன்று கட்டங்களாக லாக் டவுன் விதிகளை தளர்த்தும் வரைவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, முதல்கட்டமாக அங்கு நோய் பாதிப்பில்லாதவர்கள் தக்க முன்னெடுப்புகள், சமூக இடைவெளியுடன் இயங்க வழிவகை செய்யப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு விரைந்து குணமாக்கப்படுவார்கள் எனவும் தெரிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின், அடுத்த 14 நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் நோய் தாக்கத்திலிருந்து முற்றிலும் வெளியேற்றப்படுவார்கள். அதன் பின் அவர்கள் இயல்பு நிலையில் சமூகத்தில் இயங்க அனுமதிக்கப்படுவார்கள்.

இறுதியாக நிலைமை வெகுவாக மேம்பட்டு நோய் பாதிக்கப்பட்ட ஒரு சில நபர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பும் முடிவு எடுக்கப்படும்.

மேற்கண்ட மூன்ற கட்ட நடவடிக்கைகளை அந்தந்த மாநில ஆளுநர்கள் தங்களின் சூழலுக்கேற்ப முடிவெடுத்துக்கொள்ளலாம் என அதிபர் ட்ரம்ப் அனுமதித்துள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவைத் தடுக்க நைஜீரியாவில் நடக்கும் கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.