ETV Bharat / international

தாய்ப்பால் மூலம் கரோனா பரவுமா?  - ஆய்வில் வெளியான தகவல்!

author img

By

Published : Aug 13, 2020, 5:29 AM IST

சிட்னி: தாய்ப்பாலை பாஸ்டுரைசிங் செய்யும்போது, கரோனா வைரஸ் தொற்றை செயலிழக்க செய்கிறது என்ற தகவலை ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

milk
ilk

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க மாஸ்க் அணிவது, தகுந்த இடைவெளியை பின்பற்றுவது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், தாய்ப்பால் மூலம் கரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முன்னணி எழுத்தாளர் கிரெக் வாக்கர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பத்திரிகை வெளியிட்ட ஆய்வு அறிக்கைப்படி, "ஆஸ்திரேலியாவில் மொத்தமாக ஐந்து தாய்ப்பால் சேமிக்கும் வங்கி உள்ளது. இந்த வங்கிகள் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பாலை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். பால் வழங்குபவர்களை பரிசோதிப்பது மட்டுமின்றி, பால் பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் பலவீனமான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பால் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த பாஸ்டுரை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக வாக்கர் கூறுகையில், "தொற்று நோய் காலக்கட்டத்தில் பாஸ்டுரைச் பால் வழங்குவதை பாதுகாப்பு கருதி யாரேனும் தடுக்க வாய்ப்புள்ளது. எனவே, பாஸ்டுரைச் பால் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே, கிர்பி இன்ஸ்டிடியூட்டின் பிசி-3 ஆய்வகத்தில் தாய்ப்பால் வழங்கும் நன்கொடையாளர்களிடமிருந்து சிறிய அளவிலான உறைந்த மற்றும் புதிதாக வெளிப்படுத்தப்பட்ட தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

இதையடுத்து, கரோனா வைரஸை தாய்ப்பாலில் செலுத்தி 63 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் வரை பாஸ்டுரைசேஷன் செய்தனர். இந்த செயல்முறைக்குப் பிறகு பாலை பரிசோதித்ததில் கரோனா தொற்று செயலிழந்திருந்தது தெரியவந்தது. ஆய்வகத்தில் நாங்கள் பயன்படுத்தும் வைரஸின் அளவு கரோனா பாதிப்பிருந்த பெண்களின் தாய்ப்பாலில் காணப்படுவதைவிட மிக அதிகம். எனவே, இந்த ஆய்வு முடிவு குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க மாஸ்க் அணிவது, தகுந்த இடைவெளியை பின்பற்றுவது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், தாய்ப்பால் மூலம் கரோனா பரவும் என்பதற்கு ஆதாரம் இல்லை என ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் முன்னணி எழுத்தாளர் கிரெக் வாக்கர் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சமீபத்தில் ஜர்னல் ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சைல்ட் ஹெல்த் பத்திரிகை வெளியிட்ட ஆய்வு அறிக்கைப்படி, "ஆஸ்திரேலியாவில் மொத்தமாக ஐந்து தாய்ப்பால் சேமிக்கும் வங்கி உள்ளது. இந்த வங்கிகள் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பாலை நன்கொடையாக வழங்கி வருகின்றனர். பால் வழங்குபவர்களை பரிசோதிப்பது மட்டுமின்றி, பால் பரிசோதிக்கப்பட்ட பிறகுதான் பலவீனமான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பால் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த பாஸ்டுரை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக வாக்கர் கூறுகையில், "தொற்று நோய் காலக்கட்டத்தில் பாஸ்டுரைச் பால் வழங்குவதை பாதுகாப்பு கருதி யாரேனும் தடுக்க வாய்ப்புள்ளது. எனவே, பாஸ்டுரைச் பால் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. எனவே, கிர்பி இன்ஸ்டிடியூட்டின் பிசி-3 ஆய்வகத்தில் தாய்ப்பால் வழங்கும் நன்கொடையாளர்களிடமிருந்து சிறிய அளவிலான உறைந்த மற்றும் புதிதாக வெளிப்படுத்தப்பட்ட தாய்ப்பால் பரிசோதிக்கப்பட்டது.

இதையடுத்து, கரோனா வைரஸை தாய்ப்பாலில் செலுத்தி 63 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் வரை பாஸ்டுரைசேஷன் செய்தனர். இந்த செயல்முறைக்குப் பிறகு பாலை பரிசோதித்ததில் கரோனா தொற்று செயலிழந்திருந்தது தெரியவந்தது. ஆய்வகத்தில் நாங்கள் பயன்படுத்தும் வைரஸின் அளவு கரோனா பாதிப்பிருந்த பெண்களின் தாய்ப்பாலில் காணப்படுவதைவிட மிக அதிகம். எனவே, இந்த ஆய்வு முடிவு குறித்து நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.