இந்திய சுற்றுப் பயணத்ததை முடித்துக் கொண்டு செவ்வாய்கிழமை நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைநகர் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "இந்திய சுற்றுப்பயணத்தின் போது இருதரப்பு உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளோம். அவர் (பிரதமர் நரேந்திர மோடி) நல்ல மனிதர். சிறப்பான தலைவரும்கூட. இந்தியா ஒரு வியத்தகு நாடு" என்றார்.
இரண்டு நாள் (பிப்ரவரி 24-25 ) சுற்றுப்பயணமாக மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் என குடும்பத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். இந்த பயணத்தையொட்டி, இரு நாடுகளுக்கும் இடையே 3 பில்லின் டாலர் மதிப்பில் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையும் படிங்க : 'வன்முறையை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்'