ETV Bharat / international

சர்வதேச கோவிட்-19 நிலவரம்: பிரிட்டன் மற்றும் லெபனானில் மீண்டும் லாக்டவுன் - அமெரிக்கா கரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரத்து 763 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்தனர்.

COVID-19 tracker
COVID-19 tracker
author img

By

Published : Jan 5, 2021, 3:32 PM IST

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

தற்போதைய பாதிப்பு நிலவரம்

இதுவரை எட்டு கோடியே 61 லட்சத்து 45 ஆயிரத்து 979 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 61 ஆயிரத்து 559ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே 11 லட்சத்து 05 ஆயிரத்து 194ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரத்து 763 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்தனர்.

சர்வதேச நாடுகளின் நிலவரம்

உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் இரண்டு கோடியே 13 லட்சத்து 53 ஆயிரத்து 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பிரிட்டன், லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளன.

இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அமைப்பு தகவல்

சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

தற்போதைய பாதிப்பு நிலவரம்

இதுவரை எட்டு கோடியே 61 லட்சத்து 45 ஆயிரத்து 979 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 லட்சத்து 61 ஆயிரத்து 559ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு கோடியே 11 லட்சத்து 05 ஆயிரத்து 194ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஆறு லட்சத்து 25 ஆயிரத்து 763 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 610 பேர் உயிரிழந்தனர்.

சர்வதேச நாடுகளின் நிலவரம்

உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் இரண்டு கோடியே 13 லட்சத்து 53 ஆயிரத்து 051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்து 62 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பிரிட்டன், லெபனான் உள்ளிட்ட பல நாடுகள் கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக மீண்டும் லாக்டவுன் அறிவித்துள்ளன.

இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் அமைப்பு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.