ETV Bharat / international

முன்னுதாரணமாகும் தலைவர்கள்: மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் முன்னாள் அதிபர்கள்!

வாஷிங்டன்: பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் முன்னிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவுள்ளனர்.

author img

By

Published : Dec 4, 2020, 2:23 PM IST

அதிபர்
அதிபர்

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு உலகிலேயே முதல் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி 94.5 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அவசரப் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கக் கோரி அந்நிறுவனம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மக்கள் முன்னிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவுள்ளனர்.

'தி ஜோ மேடிசன் ஷோ' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அதிபர் ஒபாமா, "கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது நான் அதை எடுத்துக் கொள்கிறேன். தொலைக்காட்சியிலோ அல்லது வீடியோ மூலமாகவோ நான் கரோனா மருந்து எடுத்துக் கொள்வது ஒளிபரப்பப்படும். நான் அறிவியலை நம்புகிறேன். அதனை மக்களுக்கு உணர்த்துவதற்காக நான் இதை செய்யவுள்ளேன். ஆனால், தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கு சில காலம் தேவைப்படும்" என்றார்.

அதேபோல், கரோனா தடுப்பூசி குறித்து நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மக்கள் முன்னிலையில் மருந்தை எடுத்துக் கொள்வார் என அவரது செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யூரியா தெரிவித்துள்ளார்.

மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ், மக்கள் முன்னிலையில் மருந்தை எடுத்துக் கொள்வார் என அவரின் தலைமை அலுவலர் ஃப்ரெடி ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

ஃபைஸர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்குவது குறித்த முடிவை வரும் வாரங்களில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எடுக்கவுள்ளது. இந்தாண்டு இறுதியில், 20 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்தை இரண்டு டோஸ்களாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் (BioNTech) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு உலகிலேயே முதல் நாடாக பிரிட்டன் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசி 94.5 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில், அவசரப் பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கக் கோரி அந்நிறுவனம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மக்கள் முன்னிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளவுள்ளனர்.

'தி ஜோ மேடிசன் ஷோ' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அதிபர் ஒபாமா, "கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது நான் அதை எடுத்துக் கொள்கிறேன். தொலைக்காட்சியிலோ அல்லது வீடியோ மூலமாகவோ நான் கரோனா மருந்து எடுத்துக் கொள்வது ஒளிபரப்பப்படும். நான் அறிவியலை நம்புகிறேன். அதனை மக்களுக்கு உணர்த்துவதற்காக நான் இதை செய்யவுள்ளேன். ஆனால், தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவதற்கு சில காலம் தேவைப்படும்" என்றார்.

அதேபோல், கரோனா தடுப்பூசி குறித்து நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் மக்கள் முன்னிலையில் மருந்தை எடுத்துக் கொள்வார் என அவரது செய்தித் தொடர்பாளர் ஏஞ்சல் யூரியா தெரிவித்துள்ளார்.

மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ், மக்கள் முன்னிலையில் மருந்தை எடுத்துக் கொள்வார் என அவரின் தலைமை அலுவலர் ஃப்ரெடி ஃபோர்டு தெரிவித்துள்ளார்.

ஃபைஸர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கான அனுமதி வழங்குவது குறித்த முடிவை வரும் வாரங்களில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எடுக்கவுள்ளது. இந்தாண்டு இறுதியில், 20 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்தை இரண்டு டோஸ்களாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.