ETV Bharat / international

ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

author img

By

Published : Dec 15, 2020, 11:46 AM IST

வாஷிங்டன்: ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் அமெரிக்காவின் அதிபர், துணை அதிபராக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Electoral college votes Biden
Electoral college votes Biden

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவருடன் கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிபர் தேர்தலின்போது மக்கள் நேரடியாக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதற்குப் பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை வாக்காளர்கள் குழு என்று சொல்லலாம். இந்தக் குழுவினரே அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அதிபர், துணை அதிபர்களை இந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நடைமுறை நேற்று (டிச. 14) நடைபெற்றது. 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களில் பைடன்-ஹாரிஸ் தரப்புக்கு 306 வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் அதிபர் ட்ரம்பிற்கு வெறும் 232 வாக்குகளே கிடைத்தன.

எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அதிபர்-துணை அதிபரை தேர்ந்தெடுப்பது ஒரு வழக்கமான சம்பிரதாய நடைமுறைதான். இருப்பினும் இந்த முறை தேர்தல் முடிவுகள் குறித்து ட்ரம்ப் தொடர்ந்து, குற்றஞ்சாட்டி வருவதால் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அதிபர்-துணை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் இந்த நாள் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

அதிபர் ட்ரம்ப் தற்போதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப், இது குறித்து பல்வேறு வழக்குளையும் தொடர்ந்துள்ளார். அதேபோல ட்ரம்ப் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவருடன் கமலா ஹாரிஸ் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிபர் தேர்தலின்போது மக்கள் நேரடியாக வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில்லை. அதற்குப் பதிலாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களை வாக்காளர்கள் குழு என்று சொல்லலாம். இந்தக் குழுவினரே அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அதிபர், துணை அதிபர்களை இந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் நடைமுறை நேற்று (டிச. 14) நடைபெற்றது. 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களில் பைடன்-ஹாரிஸ் தரப்புக்கு 306 வாக்குகள் கிடைத்தன. அதேநேரம் அதிபர் ட்ரம்பிற்கு வெறும் 232 வாக்குகளே கிடைத்தன.

எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அதிபர்-துணை அதிபரை தேர்ந்தெடுப்பது ஒரு வழக்கமான சம்பிரதாய நடைமுறைதான். இருப்பினும் இந்த முறை தேர்தல் முடிவுகள் குறித்து ட்ரம்ப் தொடர்ந்து, குற்றஞ்சாட்டி வருவதால் எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அதிபர்-துணை அதிபரைத் தேர்ந்தெடுக்கும் இந்த நாள் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

அதிபர் ட்ரம்ப் தற்போதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ட்ரம்ப், இது குறித்து பல்வேறு வழக்குளையும் தொடர்ந்துள்ளார். அதேபோல ட்ரம்ப் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.