ETV Bharat / international

அமெரிக்காவில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கரோனாவால் உயிரிழக்கலாம் - ஜோ பைடன்

author img

By

Published : Jan 23, 2021, 5:54 PM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Biden
Biden

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வைரஸ் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆறு லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அமெரிக்காவில் தற்போது வரை 2 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரத்து 41 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வைரஸ் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆறு லட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அமெரிக்காவில் தற்போது வரை 2 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரத்து 41 பேர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 லட்சத்து 14 ஆயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.