கியூபா விடுதலைக்காகப் போராடிய முக்கியத் தலைவர்களுள் முதன்மையானவர், சேகுவேரா. எங்கெல்லாம் ஏகாதிபத்தியம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதற்கு எதிராக சேவின் கால்கள் பயணித்தன.
இந்நிலையில் அர்ஜென்டினா நாட்டில் உள்ள ரொசாரியோவில் உள்ள சேகுவேராவின் வீடு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. 4 லட்சம் டாலருக்கு(ரூ.2 கோடியே 99 லட்சத்து 74 ஆயிரத்து 220 ) இந்த வீடு விற்பனை செய்ய உள்ளதாக, வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கரோனா ஊரடங்கு காரணமாக, வீட்டை விரைவாக விற்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்த வீடு 15 பேரிடம் கை மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.