ETV Bharat / international

கரோனா பாதித்த தாய்: தொற்றில்லாமல் பிறந்த குழந்தை

author img

By

Published : Apr 9, 2020, 3:24 PM IST

லிமா: கரோனா தொற்று உறுதியான தாய்மார்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு முதற்கட்ட சோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ே்ே்
ே்

அமெரிக்காவின் ’பெரு’ மாகாணத்தில் எட்கர்டோ ரெபக்லியாட்டி மார்டின்ஸ் நேஷனல் மருத்துவமனை (Edgardo Rebagliati Martins National Hospital) உள்ளது. இங்கு கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அதீத பாதுகாப்பு வசதிகளுடன்தான் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களின் பிரசவத்தின்போது மகளிர் மருத்துவ வல்லுநர்கள், மகப்பேறு நிபுணர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட பெரிய மருத்துவக் குழுவினரே உடனிருப்பார்கள்.

அந்த வகையில், மார்ச் 27ஆம் தேதி, கரோனா தொற்று உறுதியான பெண்ணிற்கு 1 கிலோ 77 கிராம் எடை கொண்ட குழந்தை பிறந்தது. அதேபோல், கரோனா தொற்று பாதித்த மற்றொரு பெண்ணுக்கு மார்ச் 31ஆம் தேதி மூன்று கிலோ 300 கிராம் எடையுடன் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால், குழந்தைகளுக்கும் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தில், இரண்டு குழந்தைகளையும் தனிமைப்படுத்தி மருத்துவமனை நிர்வாகம் பரிசோதணை மேற்கொண்டது.

முதற்கட்ட சோதனையில் இரண்டு குழந்தைக்கும் கரோனா தொற்று இல்லாதது உறுதியாகியுள்ளது. இருப்பினும் இரண்டாம் கட்ட சோதனைக்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவின் தலைநகராக மாறும் மகாராஷ்டிரா!

அமெரிக்காவின் ’பெரு’ மாகாணத்தில் எட்கர்டோ ரெபக்லியாட்டி மார்டின்ஸ் நேஷனல் மருத்துவமனை (Edgardo Rebagliati Martins National Hospital) உள்ளது. இங்கு கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அதீத பாதுகாப்பு வசதிகளுடன்தான் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. குறிப்பாக பெண்களின் பிரசவத்தின்போது மகளிர் மருத்துவ வல்லுநர்கள், மகப்பேறு நிபுணர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட பெரிய மருத்துவக் குழுவினரே உடனிருப்பார்கள்.

அந்த வகையில், மார்ச் 27ஆம் தேதி, கரோனா தொற்று உறுதியான பெண்ணிற்கு 1 கிலோ 77 கிராம் எடை கொண்ட குழந்தை பிறந்தது. அதேபோல், கரோனா தொற்று பாதித்த மற்றொரு பெண்ணுக்கு மார்ச் 31ஆம் தேதி மூன்று கிலோ 300 கிராம் எடையுடன் குழந்தை ஒன்று பிறந்தது. ஆனால், குழந்தைகளுக்கும் கரோனா தொற்று பரவும் என்ற அச்சத்தில், இரண்டு குழந்தைகளையும் தனிமைப்படுத்தி மருத்துவமனை நிர்வாகம் பரிசோதணை மேற்கொண்டது.

முதற்கட்ட சோதனையில் இரண்டு குழந்தைக்கும் கரோனா தொற்று இல்லாதது உறுதியாகியுள்ளது. இருப்பினும் இரண்டாம் கட்ட சோதனைக்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவின் தலைநகராக மாறும் மகாராஷ்டிரா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.