ETV Bharat / international

16 வயது சிறுமிக்கு சர்வதேச பொது மன்னிப்பு சபையின் உயரிய விருது! - கிரெட்டா தன்பெர்குக்கு அம்னிஸ்டி இண்டர்நோஷ்னலின் உயரிய விருது

வாஷிங்டன்: 16 வயதேயான இளம் பருவநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க்குக்கு சர்வதேச பொது மன்னிப்பு சபையின் உயரிய விருதான 'மனசாட்சிக்கான தூதர்' விருது அளிக்கப்பட்டுள்ளது.

greta thunberg
author img

By

Published : Sep 18, 2019, 12:19 PM IST

Updated : Sep 18, 2019, 4:17 PM IST

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் (16). இவர், பருவநிலை மாற்றத்தை தடுப்பது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்தாண்டு அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், பள்ளிப் படிப்பை சுமார் ஓராண்டு நிறுத்திவிட்டு, பல்வேறு நாடுகளுக்கு பயணித்து மாணவர்களுடன் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்த போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்.

அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வந்துள்ள கிரெட்டாவுக்கு, பொதுமன்னிப்பு சபையின் உயரிய விருதான 'மனசாட்சிக்கான தூதர்' (Ambassador of Conscience) விருதை அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஐநாவில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதல் இளைஞர் பருவநிலை உச்சி மாநாட்டில் கிரெட்டா கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

புவியின் மீது கொண்ட காதல் - பள்ளிப் படிப்பைத் துறந்த 16 வயது சிறுமி!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் (16). இவர், பருவநிலை மாற்றத்தை தடுப்பது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்தாண்டு அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விழிப்புணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்னர், பள்ளிப் படிப்பை சுமார் ஓராண்டு நிறுத்திவிட்டு, பல்வேறு நாடுகளுக்கு பயணித்து மாணவர்களுடன் இணைந்து பருவநிலை மாற்றம் குறித்த போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்.

அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வந்துள்ள கிரெட்டாவுக்கு, பொதுமன்னிப்பு சபையின் உயரிய விருதான 'மனசாட்சிக்கான தூதர்' (Ambassador of Conscience) விருதை அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஐநாவில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள முதல் இளைஞர் பருவநிலை உச்சி மாநாட்டில் கிரெட்டா கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

புவியின் மீது கொண்ட காதல் - பள்ளிப் படிப்பைத் துறந்த 16 வயது சிறுமி!

Intro:மரங்களை வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் வைக்க இயலுமா? - மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

காளவாசல் முதல் குருதியேட்டர் வரையுள்ள பகுதியில் மீதமுள்ள 80 மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் வைக்க இயலுமா? மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:மரங்களை வேரோடு பெயர்த்து வேறு இடத்தில் வைக்க இயலுமா? - மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

காளவாசல் முதல் குருதியேட்டர் வரையுள்ள பகுதியில் மீதமுள்ள 80 மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் வைக்க இயலுமா? மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

மதுரை செல்லூரைச் சேர்ந்த குபேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " காளவாசல் சந்திப்பில் இருந்து குரு தியேட்டர் சந்திப்பு வரை உள்ள அரசமரம், பூவரசம், நெட்டிலிங்க மரம் போன்ற பல வகை மரங்கள் வெட்டப்பட்ட வருகின்றன. 138 மரங்கள் வெட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரங்களை வெட்டாமல் பாலம் அமைக்க கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. ஆகவே மரங்களை வெட்டுவது தொடர்பாக முறையான விதிகளை உருவாக்கவும், மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் நடும் நவீன இயந்திரங்களை பயன்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இது போன்ற பணிகளின் போது மரங்களையும் அவற்றில் இருக்கும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களையும் கணக்கிட்டு பெரும்பாலான மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், அது தொடர்பான விதிகளை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். மேலும் பல்வேறு நவீன திட்டங்களுக்காக அழிக்கப்படும் மரங்களுக்கு ஈடாக குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் காடு வளர்ப்பை அதிகப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல மரங்கள் ஏற்கனவே வெட்டப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், பிற மாநிலங்களைப் போல மரங்களை பாதுகாக்கும் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதில் தமிழக அரசு ஏன் தீவிரம் காட்டுவதில்லை? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, காளவாசல் முதல் குரு தியேட்டர் வரையுள்ள பகுதியில் மீதமுள்ள 80 மரங்களை வேரோடு எடுத்து வேறு இடத்தில் வைக்க இயலுமா? என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.Conclusion:
Last Updated : Sep 18, 2019, 4:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.