ETV Bharat / international

மடகாஸ்கரில் சரக்கு கப்பல் மூழ்கி 19 பேர் உயிரிழப்பு, 66 மாயம்

author img

By

Published : Dec 21, 2021, 8:57 PM IST

சட்ட விரோதமாக 130 பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் மடகாஸ்கரின் வடகிழக்கே கடலில் மூழ்கியதில் 19 பேர் உயிரிழந்தனர்.

Madagascar ship sinks
Madagascar ship sinks

அன்டனானரிவோ: மடகாஸ்கர் நாட்டின் மனநராவில் இருந்து இன்று ஃபிரான்சியா என்னும் சரக்குக் கப்பல் இவோங்கோ துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. ஆனால் செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால், அருகில் உள்ள துறைமுகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடற்படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கப்பல் 60 விழுக்காடு நீருக்குள் மூழ்கியதால்,

19 பேர் உயிரிழந்தனர். 66 மாயமாகினர். 45 பேர் மீட்கப்பட்டனர். முதல்கட்ட தகவலில், இந்த சரக்கு கப்பலில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் சட்ட விரோதமாக ஏற்றிவந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் தரை தட்டிய பார்ஜ் கப்பல்: விசைப்படகுகள் மூலம் மீட்பு

அன்டனானரிவோ: மடகாஸ்கர் நாட்டின் மனநராவில் இருந்து இன்று ஃபிரான்சியா என்னும் சரக்குக் கப்பல் இவோங்கோ துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. ஆனால் செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக கப்பலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால், அருகில் உள்ள துறைமுகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடற்படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கப்பல் 60 விழுக்காடு நீருக்குள் மூழ்கியதால்,

19 பேர் உயிரிழந்தனர். 66 மாயமாகினர். 45 பேர் மீட்கப்பட்டனர். முதல்கட்ட தகவலில், இந்த சரக்கு கப்பலில் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் சட்ட விரோதமாக ஏற்றிவந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் தரை தட்டிய பார்ஜ் கப்பல்: விசைப்படகுகள் மூலம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.