ETV Bharat / entertainment

ஜெயமோகன் படைப்பில் உருவாகும் 'ரத்தசாட்சி' திரைப்படம்

author img

By

Published : Nov 8, 2022, 1:32 PM IST

ஜெயமோகன் எழுதிய சிறுகதையை தழுவி ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘ரத்தசாட்சி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஜெயமோகன் சிறுகதையை தழுவி உருவாகும் ரத்தசாட்சி
ஜெயமோகன் சிறுகதையை தழுவி உருவாகும் ரத்தசாட்சி

ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "ரத்தசாட்சி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம், பிரபல எழுத்தாளரும் "பொன்னியின் செல்வன்" மற்றும் "வெந்து தணிந்தது காடு" போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ஜெயமோகனின் படைப்புகளின் ஒன்றான "கைதிகள்" என்னும் சிறுகதையாகும்.

ஜெயமோகனின் கூற்றுப்படி, ”ரத்தசாட்சி உருவானக் கதை மற்றொரு திரைப்படத்தின் பொருளாக இருக்கத் தகுதியானது. ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குநர் என்னை அணுகி கைதிகள் கதையை திரைப்படமாக்க விரும்பினார். இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பிரபல இயக்குநர் மணிரத்னம் இக்கதையை திரைக்கு மாற்ற நினைத்தார். அவர் மட்டுமின்றி கதையின் உரிமையைப் பெற பிரபல இயக்குநர் வெற்றிமாறன் என்னை அணுகினார். ஆனால் கதை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்" என கூறியுள்ளார்.

அந்த வகையில் இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார், ஜாவேத் ரியாஸ் இசை அமைத்துள்ளார், ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இப்படம் சான்றாகும்.

படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை 'ஆஹா தமிழ் OTT' தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இதையும் படிங்க: ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” வைரலாகி வரும் பாடல்..!

ஆஹா தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு "ரத்தசாட்சி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம், பிரபல எழுத்தாளரும் "பொன்னியின் செல்வன்" மற்றும் "வெந்து தணிந்தது காடு" போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதிய ஜெயமோகனின் படைப்புகளின் ஒன்றான "கைதிகள்" என்னும் சிறுகதையாகும்.

ஜெயமோகனின் கூற்றுப்படி, ”ரத்தசாட்சி உருவானக் கதை மற்றொரு திரைப்படத்தின் பொருளாக இருக்கத் தகுதியானது. ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குநர் என்னை அணுகி கைதிகள் கதையை திரைப்படமாக்க விரும்பினார். இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் பிரபல இயக்குநர் மணிரத்னம் இக்கதையை திரைக்கு மாற்ற நினைத்தார். அவர் மட்டுமின்றி கதையின் உரிமையைப் பெற பிரபல இயக்குநர் வெற்றிமாறன் என்னை அணுகினார். ஆனால் கதை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்" என கூறியுள்ளார்.

அந்த வகையில் இப்படத்தை ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார், ஜாவேத் ரியாஸ் இசை அமைத்துள்ளார், ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதற்கு இப்படம் சான்றாகும்.

படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை 'ஆஹா தமிழ் OTT' தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இதையும் படிங்க: ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” வைரலாகி வரும் பாடல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.