சென்னை: திரைப்பட நடிகரும், இயக்குநரும், எழுத்தாளருமான ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்றிரவு (ஜனவரி 24) காலமானார். வசூல் ராஜா எம்பிபிஎஸ், காக்கிச் சட்டை, விசாரணை, விக்ரம் வேதா, வரலாறு முக்கியம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்தவர்.
![அவது மகன் கலைச்செல்வன் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17564719_l.jpeg)
மக்கள் ஆட்சி, கண்ட நாள் முதல், கண்ணாத்தாள் உள்ளிட்ட படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியவர். ஆயிரம் பூக்கள் மலரட்டும், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு உள்ளிட்ட 6 படங்களை இயக்கியவர். இவருக்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மகன் கலைச்செல்வன் தனது சமூக வலைதள பக்கத்தில், எனது தந்தை ஈ.ராமதாஸ் எம்ஜிஎம் மருத்துவமனையில் மாராடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்களுக்குகள் 24/01/2023 காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கேகே நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவுக்கு பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: கதாநாயகர்களாக களமிறங்கும் பரிதாபங்கள் கோபி - சுதாகர்